திமுகவில் இருந்து காங்கிரஸ் அவுட்?…. சபரீசன் நடத்திய ரகசிய ஆபரேஷன்…. தெறிக்கும் ரிப்போர்ட்….!

Spread the love

தமிழக அரசியலில் எதிர்வரும் தேர்தல்களை முன்னிட்டு கூட்டணிக் கணக்குகள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்க வேண்டுமா என்பது குறித்து முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன், மாவட்ட ரீதியாக ரகசிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் திமுக நிர்வாகிகளுடன் அவர் நடத்திய ஆலோசனையில், கட்சியின் கள நிலவரம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் பலம் குறித்து விரிவாகக் கேட்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஆலோசனைக் கூட்டங்களில், “திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிப்பது நமக்கு லாபகரமானதா?” என்ற நேரடி கேள்வியை சபரீசன் முன்வைத்துள்ளார். அதற்குப் பதிலளித்த பெரும்பாலான மாவட்ட நிர்வாகிகள், கன்னியாகுமரி மாவட்டத்தைத் தவிர மற்ற எந்த மாவட்டங்களிலும் காங்கிரஸால் திமுகவிற்குப் பெரிய அளவில் வாக்கு வங்கி அதிகரிப்பதில்லை என்று தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரியில் உள்ள காங்கிரஸ் செல்வாக்கைக்கூட, முறையான தேர்தல் வியூகங்கள் மற்றும் கூடுதல் கவனத்தின் மூலம் திமுகவே ஈடுகட்ட முடியும் என்பதால், காங்கிரஸ் இல்லாமலேயே தேர்தலைச் சந்திக்கலாம் என்ற அதிரடி கருத்தை அவர்கள் முன்வைத்துள்ளனர்.

மேலும், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்தும் இந்த ஆய்வில் விவாதிக்கப்பட்டுள்ளது. விஜய்க்கு 20 சதவீத வாக்குகள் இருப்பதாகக் கூறப்படுவது ஒரு பிம்பமே தவிர, அது திமுகவின் வாக்கு வங்கியைப் பாதிக்காது என்று நிர்வாகிகள் கூறியுள்ளனர். குறிப்பாக, தென் மாவட்டக் கடலோரப் பகுதிகளில் விஜய்க்கு இருக்கும் ஓரளவிலான செல்வாக்கு, ஏற்கனவே நாம் தமிழர் கட்சி வைத்திருக்கும் வாக்குகளில் வேண்டுமானால் பிளவை ஏற்படுத்தலாமே தவிர, திமுகவின் கோட்டையைத் தகர்க்க முடியாது என்பதே அவர்களின் கணிப்பாக உள்ளது.

தொகுதிப் பங்கீட்டு விவகாரத்தில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் கூடுதல் இடங்களைக் கோரி அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், திமுக தரப்பில் இந்த ரகசிய சர்வே முடிவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஒருவேளை காங்கிரஸ் பிடிவாதம் காட்டினால், அவர்களைக் கழற்றிவிட்டு தேர்தலைச் சந்திக்கவும் திமுக தயாராகி வருவதாகத் தெரிகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே “கூட்டணி ஆட்சி தமிழகத்திற்கு ஒத்து வராது” என்று குறிப்பிட்டிருந்தது, காங்கிரஸுக்கான ஒரு மறைமுக எச்சரிக்கையாகவே அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

“60 வருஷமா பேசிப் பேசியே நாட்டை கெடுத்தாங்க…!” – முதல்வர் விஜய்யின் விமர்சனங்களுக்கு தந்தை S.A.C கொடுத்த மரண மாஸ் பதிலடி…!!

தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள்…

10 minutes ago

“6 மணிக்கு மேல நோ பாலிடிக்ஸ்… முதலமைச்சர் விஜய்யின் ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ்… பின்னணியில் இருக்கும் ‘அந்த’ ரகசியம்…!!”

திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடனமாடுவது, சண்டைக் காட்சிகளில் மிரட்டுவது எனத் தத்ரூபமாக நடிக்கும் முதலமைச்சர் விஜய், படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியானவர்…

28 minutes ago

பிரியாணி பிரியர்களுக்கு வந்த செம நியூஸ்… மளமளவென குறையும்.. பாஸ்மதி அரிசி விலை… பின்னணி என்ன…?

ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளதால், இந்தியாவிலிருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி…

34 minutes ago

பகீர்… மைனர் மருமகளைக் கடத்தி கட்டாயத் திருமணம்… போலீசுக்கு பயந்து விஷம் கொடுத்த கணவன்… சிறுமி பரிதாப பலி…!!

மத்தியப் பிரதேச மாநிலம் கந்வா மாவட்டத்தில் உறவுமுறையை கொச்சைப்படுத்தும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பந்தானா பகுதியைச்…

46 minutes ago

“ரூ.30 ஆயிரம் கடனுக்காக கொடுத்த ஆதார்… பஞ்சர் கடைக்காரர் பெயரில் ரூ.28 கோடி ஜிஎஸ்டி மோசடி… அதிர்ச்சி பின்னணி…!”

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் பஞ்சர் கடை நடத்தி வரும் ராஜ் பிரஜாபதி என்ற ஏழைத் தொழிலாளியின் அடையாள அட்டைகளைப்…

52 minutes ago

காலையிலேயே குட் நியூஸ்.. கடன் முழுவதும் தள்ளுபடி.. தமிழக மக்களுக்கு CM விஜய் இன்ப அதிர்ச்சி…!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி,…

1 மணத்தியாலம் ago