தமிழகத்தில் அரசியல் களம் சுழன்றடிக்கத் தொடங்கியுள்ளது. 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, முதல்வர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்களைக் கடந்திருக்கும் நிலையில், மாநில அரசியல் சூழல் அதிரடி திருப்பங்களைக் கண்டு வருகிறது. ஆட்சி அமைந்த தொடக்கத்திலிருந்தே பெரும்பான்மையை நிரூபிப்பது மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதில் எழுந்த சவால்கள், குதிரை பேரக் குற்றச்சாட்டுகள் எனப் பல்வேறு விமர்சனங்கள் விஜய் அரசைச் சூழ்ந்தன. இந்தச் சூழலில், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுகவைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ஆதரவளித்தது மாநில அரசியலில் பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் முன்பாகவே, அதிமுகவின் முக்கிய எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டுத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதற்கிடையில், இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் விஜய், தனது திருச்சி கிழக்கு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து திருச்சி கிழக்கு, பெருந்துறை, மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், கரூர் மற்றும் விராலிமலை ஆகிய 7 சட்டசபை தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டன. இதில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய தொகுதிகளுக்கு அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், அக்டோபர் 9இல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் தற்போது அறிவித்துள்ளது.
முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்த போதே, இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பளித்து வெற்றி பெற வைப்பதாகத் த.வெ.க தலைமை வாக்குறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், கசிந்துள்ள முதற்கட்ட தகவல்களின்படி, மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்தியபாமாவும் தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக மீண்டும் களமிறக்கப்பட உள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆட்சி அமைந்த பிறகு சந்திக்க உள்ள இந்த முதல் இடைத்தேர்தலைத் த.வெ.க கௌரவப் பிரச்சினையாகப் பார்க்கிறது.
மறுபுறம், இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க திமுகவும், தங்கள் கட்சி வேட்பாளர்கள் விலகியதால் அதிர்ச்சியில் இருக்கும் அதிமுகவும் இந்த இடைத்தேர்தலில் தீவிரமாகப் போட்டியிட வியூகங்களை வகுத்து வருகின்றன. எதிர்க்கட்சிகள் பலமான வேட்பாளர்களைக் களமிறக்கத் திட்டமிட்டு வரும் நிலையில், த.வெ.க அரசு மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு மக்கள் அளிக்கும் பதிலடியாக இந்த இடைத்தேர்தல் முடிவுகள் இருக்கும் என்பதால், தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள 'வனாந்தரா' ரிசார்ட்டில் வரவேற்பாளராகப் பணியாற்றிய 19 வயது இளம்பெண் அங்கிதா பண்டாரி, கடந்த 2022-ஆம்…
நேபாளத்தில் உள்ள சேதி ஆற்றில் ஒரு நாயைப் பாலம் வழியே உயிருடன் தூக்கி வீசும் அதிர்ச்சியளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில்…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கான்சிராம் கூட்டு மருத்துவமனை மற்றும் அதிர்ச்சி பராமரிப்பு மையத்தில் நெஞ்சை பதறவைக்கும் அவல…
தெலுங்கானா மாநிலம் அச்சம்பேட்டை மண்டலத்தில் உள்ள சிங்காரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொட்டுபல்லி பால்னாரி (68). இவர் நேற்று இரவு தனது…
கான்பூரில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில், ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் மருத்துவர் போல நடித்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து மருந்து…
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சகலேஷ்பூர் பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் 23 வயதான வர்ஷா என்ற பெண் தனது…