Categories: சினிமா

ஓவியத்தில் சிறந்து விளங்கியும் வாலி பாடலாசிரியராக காரணம் என்ன?.. அவரே பகிர்ந்த சுவாரஸ்யம்..!

Spread the love

தமிழ் திரை உலகில் நான்கு தலைமுறைகளுக்கு பாட்டு எழுதியவர் தான் கவிஞர் வாலி. இவர் பாட்டு எழுதியதோடு சிறுகதை, கவிதை மற்றும் நடிப்பு என பல்துறை வித்தகராகத்தான் திகழ்ந்தார். அவர் திரைத்துறையில் சுமார் 15,000 பாடல்களை எழுதியுள்ளார். சுமார் 17 திரைப்படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனமும் எழுதி இருக்கிறார். வடை மாலை என்ற படத்தை மாருதி ராவுடன் இணைந்து இயக்கியிருந்தார். தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை ஐந்து முறை பெற்ற பெருமைக்குரியவர். கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். வெளிநாட்டிற்கு செல்ல எத்தனையோ அழைப்பு வந்தும் வாலி செல்லவில்லை.

இப்படி பல புகழுக்குரிய வாலி 2013 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். அவர் மறைந்தாலும் இன்றும் அவருடைய பாடல்கள் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் ரசிக்க வைத்து வருகின்றன.  இந்த நிலையில் கவிஞர் வாலி திரைத்துறையில் நுழைவதற்கு முன்பு மிகப் பெரிய ஓவியராக இருந்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்தப் பேட்டியில், எனக்கு இளம் வயதில் ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம். பல கவிஞர்களின் புகைப்படத்தை நான் வரைந்து உள்ளேன்.

காமராஜர் புகைப்படத்தை கூட நான் வரைந்து உள்ளேன். என்னுடைய வீட்டில் சுவற்றில் நிறைய ஓவியங்கள் இருக்கும். கல்கி என்னுடைய வீட்டுக்கு வந்து அதனை பார்த்து பாராட்டியுள்ளார். நான் ராஜ சவுத்ரி கிட்ட 1949 ஆம் ஆண்டு ஒரு வருடம் ஓவியக்கலை பயிற்சி பெற்றேன். கிருஷ்ணா ராவ் தான் என்னுடைய டீச்சர். பூர்வ ஜென்மத்தில் ஏதோ நாம் ஓவியத்தில் நல்ல கலைஞராக இருந்துள்ளோம் அதிலிருந்து தான் தற்போது நமக்கு சற்று ஓவியம் வந்துள்ளது, நமக்கு ஓவியம் சுத்தமாக வராது என்று நினைத்து தான் நான் ஓவியம் வரைவதை விட்டேன் என்று வாலி ஒரு பேட்டியில் பேசிய தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Nanthini

Recent Posts

குஷியோ குஷி தமிழகம் முழுவதும் அடுத்த 3 மாதங்களில்… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!

தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், அடுத்த 3 மாதங்களுக்குள் புதிதாக 2,000 மின்சார ஏசி பஸ்களை…

4 minutes ago

4 மாசமா யாருக்குமே தெரியல… பர்தாவுக்குள் ஒளிந்திருந்த பகீர் உண்மை… 50 சவரன் நகையை நைசாக சுருட்டிய ‘நவநாகரீக’ பெண்… சென்னையில் அடுத்தடுத்து நடந்த அதிரடி கைதுகள்…!

சென்னை வியாசர்பாடியில் உள்ள பிரபல நகைக் கடையில் கடந்த நான்கு மாதங்களாக வாடிக்கையாளர் போல பர்தா அணிந்து வந்து, ஊழியர்களின்…

14 minutes ago

“உன் கழுத்தை அறுத்துடுவேன்டா”…பள்ளி சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமை… சிக்கிய 3 காமுகர்கள்… நீதிமன்ற வளாகத்தில் ஆவேசமடைந்த தந்தை… கதிகலங்கி நின்ற போக்சோ கைதி…!

விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமிகளுக்கு எதிராக அரங்கேறிய அடுத்தடுத்த பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக, கடந்த சனிக்கிழமை (ஜூலை 04) ஒரே நாளில்…

53 minutes ago