#image_title
தென்னிந்திய தமிழ் சினிமாவில் பின்னனி பாடகிகளில் ஒருவராக வலம் வந்தவர் பிரபல பின்னணி பாடகி சின்மயி . இவர் சினிமாவில் பல படங்களில் பால பாடல்களை பாடியுள்ளார். இருப்பினும் இவர் இதன் மூலம் பிரபலமானதை விட பல்வேறு சர்ச்சைகளில் பிரபலம் அடைந்தது தான் அதிகம் . சின்மயி மற்றும் வைரமுத்து ஆகிய இருவருக்கும் உள்ள பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தார் என வைரமுத்து மீது சின்மயி கொடுத்த புகார் சமூக வளைதள பக்கத்தில் மிகவும் வைரலாக பரவி வந்தன.
இதனைத் தொடர்ந்து அந்த விஷயம் சர்ச்சையில் முடிவடைந்தது மட்டுமில்லாமல் பாடகி சின்மயிக்கு அதன் பிறகு பாடும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு விட்டது. இதைத்தொடர்ந்து விஜய் டிவியின் மூலம் பிரபலமான விஜே அர்ச்சனா திடீரென கவிஞர் வைரமுத்துவை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவியது. இதற்கு சின்மயி ஒரு கமெண்ட் ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் ‘இப்பொழுது தலைமேல் கை வைத்து ஆசீர்வதிப்பது போல் இருக்கும் நாளடைவில் அவை மாறுபடும். அவரிடம் பழகும் போது கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள்’ என்றும் எச்சரித்திருந்தார்.
இதுகுறித்து அர்ச்சனாவிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது ‘ என்னுடைய அப்பா ஒரு ஆசிரியர். என் வீட்டில் எல்லோருக்கும் வைரமுத்து சாரை மிகவும் பிடிக்கும். அந்த வகையில் ஒரு நாள் நான் படபிடிப்பு தளத்தில் வைரமுத்து சாரை சந்தித்தேன். நான் உங்களுடைய ரசிகை என்று கூறினேன். அவ்வளவுதான் ஆனால் எனக்கு சின்மயியை எந்த ஒரு தனிப்பட்ட முறையிலும் தெரியாது.
மேலும் சிலர் இப்படி தான் பேச செய்கிறார்கள் ஊர் வாயை அடைப்பது நம்மால் முடியாது. நான் வைரமுத்துவின் தீவிர ரசிகை என்ற காரணத்தினால் தான் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன் அவ்வளவுதான். இதை புரியாதவர்கள் பலரும் நாளுக்கு நாள் சமூக வலைதள பக்கத்தில் பல்வேறு புதிய புதிய பிரச்சனைகளை உண்டாக்கி வருகிறார்கள் ‘ என சின்மயிக்கு பதிலடி கொடுத்திருந்தார்.
தற்பொழுது அர்ச்சனா நேற்றுடன் முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக கலந்து கொண்டு டைட்டிலையும் வென்றுள்ளார். இந்நிலையில் நேற்று சின்மயி நடந்து முடிந்த பழைய பிரச்சனை குறித்து மீண்டும் பதிவு வெளியிட்டு அர்ச்சனாவை வம்புக்கு இழுத்துள்ளார். அந்த பதிவில் அவர், ‘ நான் நாசமா போனா எனக்கொரு பிரச்னையும் இல்ல. என்று அர்ச்சனாவை குறிப்பிட்டு, அர்ச்சனா மாதிரி பெண்கள் இருக்கும் போது மோசமான ஆண்கள் தான் ஆட்சி செய்வாங்க’ என்று சர்ச்சையான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு…
தூத்துக்குடி சங்கராபுரத்தைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மகள் ரேவதிக்கும் (24), ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த சுரேஷ்குமாருக்கும் (25) காதல்…
நாசிக் டிசிஎஸ் (TCS) நிறுவனத்தின் பிபிஓ பிரிவில் பெண் ஊழியர்களுக்கு எதிராக அரங்கேறியுள்ள பாலியல் மற்றும் மத ரீதியான அத்துமீறல்கள்,…
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக அறிவித்துள்ள மகளிர் நலத்திட்டங்கள் பொதுமக்கள் மத்தியில்…
சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரக் களத்தில் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கைகள், உலக கச்சா…
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி (ஏப்ரல் 16), தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து இல்லத்தரசிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச…
தங்கம் இன்று சாமானியர்களின் கைக்கு எட்டாத ஒரு கனியாக மாறிக்கொண்டிருப்பதன் பின்னணியில் உள்ள உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளை…