தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாதாரண மருத்துவ பரிசோதனைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதன் பிறகு முதல்வருக்கு சற்று உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மூன்று நாட்கள் மருத்துவமனையில் ஓய்வில் இருப்பார் என திமுக மூத்த நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இன்று காலை முதல்வருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.
இப்படியான நிலையில் முதல்வர் ஸ்டாலினின் இதயத்துடிப்பில் ஏற்பட்ட மாறுபாட்டால் தலை சுற்றல் ஏற்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த பிரச்சனையை சரி செய்வதற்காக இன்று காலை ஆஞ்சியோகிராம் சோதனை செய்யப்பட்டதாகவும் அதில் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த இரண்டு நாட்களில் முதல்வர் ஸ்டாலின் வழக்கம் போல தன் பணிகளை மேற்கொள்வார் என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் அவதூறு மற்றும் ஆபாசப் பதிவுகளைப் பரப்புபவர்கள்…
உலகின் மிகச்சிறந்த மற்றும் மர்மமான தீர்க்கதரிசிகளில் ஒருவராகக் கருதப்படும் பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பாபா வாங்கா, சிறுவயதிலேயே பார்வையை இழந்தவர்.…
புகழ்பெற்ற கர்நாடக இசை வீணை கலைஞரான வீணா காயத்ரி, சென்னை மந்தைவெளியில் உள்ள அம்மா உணவகத்திற்கு நேரில் சென்று உணவு…
தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கட்சியின் மூத்த தலைவர்களான டி.ஆர்.பாலு, கனிமொழி மற்றும் திருச்சி…
ஆந்திர மாநிலம் நகரிக்கல்லு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண், தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு 3 மகள்களுடன்…
ஜூன் 8-ஆம் தேதி நடைபெறவுள்ள 'இண்டியா' கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காது என்று அக்கட்சியின் தலைமை அதிரடியாக அறிவித்துள்ளது. கடந்த…