அரசுப் பணியில் உள்ள ஊழியர்களுக்கு ஒரு நற்செய்தி . மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வு ஊதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த அகவிலைப்படி வரப்போகிறதாம். தற்போது வரும் ரக்ஷா பந்தன் பண்டிகையின் போது இது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் காத்திருந்த அகவிலைப்படி உயர்வு வரப்போகிறது .
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வு ஊதியத்தை உயர்த்துவதாக அறிவிப்பும் வந்துள்ளன. ஆறு மாதத்திற்கு ஒருமுறை அகவலைப்படி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை முதல் டிசம்பர் மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வு தீபாவளி பண்டிகைகுள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 7வது ஊதிய குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கான 6 மாத அகவிலைப்படி உறுதி செய்யப்பட்டுள்ளது . இது ஒரு நிலையான சூத்திரம் மற்றும் விகிதத்தின் படியாக கணக்கிடப்படுமாம் . இந்த முறை வரும் அகவிலைப்படி 3% அதிகரித்து இருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது . மொத்த அகவிலைப்படி 55 சதவீதத்திலிருந்து 58 சதவீதமாக உயருமாம்.
கடந்த ஜனவரி மாதத்தில் மத்திய அரசு அகவிலைப்படி 53 லிருந்து 55 ஆக மாறியிருந்தது. 2025 ஜூன் மாதத்துக்கான நுகர்வோர் விலை குறியீடு 145 ஆக இருந்தது . 2024 ஆம் ஆண்டின் ஜூலை மாதம் முதல் 2025 ஜூன் மாதம் வரையிலான 12 மாத குறியீடு 143.6 ஆகும். எனவே இந்த முறை அகவிலைப்படி மூன்று சதவீதம் அதிகரிக்கும் என்றும் வருகின்ற தீபாவளியை ஒட்டி அகவிலைப்படி வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டின் தீபாவளி பரிசுகள் ஏற்கனவே அறிவித்தது போல வரும் என்றும், அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், அவர்களுடைய சம்பளத்தில் எதிர்பார்க்கும் அளவிற்கு உயர்வும், அகவிலைபடி உயர்வும், பயணப்படி மற்றும் வீட்டு வாடகை படியும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அகவிலைப்படி உயர்வு அரசு ஊழியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. எப்பொழுது அகவிலைப்படி வரும் என்று அனைவரும் மகிழ்ச்சியுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…