DA Hike 2026: “58% டூ 60%”…. மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் தமாக்கா… ஹோலி பண்டிகைக்கு முன் பறந்து வரும் ‘ஹேப்பி நியூஸ்’….!

Spread the love

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், 2026 ஆம் ஆண்டு ஹோலி பண்டிகைக்கு முன்பாக அகவிலைப்படி (DA) உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலாளர் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட நுகர்வோர் விலைக் குறியீட்டு (AICPI-IW) தரவுகளின் அடிப்படையில், இம்முறை அகவிலைப்படி கணிசமாக உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய நிலவரப்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு 58 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. 2025 டிசம்பர் மாதத்திற்கான விலைவாசி குறியீட்டு எண்கள் 148.2 புள்ளிகளாக உயர்ந்துள்ளதால், அகவிலைப்படியில் சுமார் 2 சதவீதம் வரை உயர்வு இருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு அமல்படுத்தப்பட்டால், மொத்த அகவிலைப்படி 60 சதவீதமாக அதிகரிக்கும். இது ஊழியர்களின் மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும்.

இந்த அகவிலைப்படி உயர்வு 2026 ஜனவரி 1-ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, மார்ச் மாத சம்பளத்துடன் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கான நிலுவைத் தொகையும் (Arrears) ஊழியர்களுக்குச் சேர்த்து வழங்கப்பட வாய்ப்புள்ளது. பண்டிகைக் காலத்தில் கையில் கூடுதல் பணம் கிடைப்பது அரசு ஊழியர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விலைவாசி உயர்வைச் சமாளிக்கும் வகையில் மத்திய அரசு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படியைத் திருத்தி அமைக்கிறது. எட்டாவது ஊதியக் குழு அமைப்பது தொடர்பான விவாதங்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், தற்போதைய ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளது. ஹோலி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு வழங்கவுள்ள இந்த ‘பரிசு’ லட்சக்கணக்கான குடும்பங்களுக்குப் பயனுள்ளதாக அமையும்.

Nanthini

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

5 மணத்தியாலங்கள் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

5 மணத்தியாலங்கள் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

5 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

6 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

6 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

6 மணத்தியாலங்கள் ago