“வெட்டப்பட்ட இளைஞரின் விரல்கள்”.. மரத்தில் கட்டி வைத்து ரத்தம் சொட்ட சொட்ட சித்திரவதை… வீடு திரும்பிய போது ஏற்பட்ட கொடூரம்…!

Spread the love

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த மட்டப் பிறையூர் கிராமத்தை சேர்ந்த தசரதன் என்பவருடைய மகன் சரவணன் (22). கூலி தொழிலாளியாக பணியாற்றி வரும் சரவணன் தினமும் வேலைக்கு சென்று விட்டு இரவு 9 மணி அளவில் வீட்டுக்கு திரும்புவதை வழக்கமாக வைத்துள்ளார். அதேபோல நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு தனது பணியை முடித்துவிட்டு அவர் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த வழியில் வந்த அதே கிராமத்தை சேர்ந்த குமார் என்பவர் சாலையில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் யாரோ குமாரை கல்லால் அடித்துள்ளனர்.

சரியாக அதே நேரத்தில் சரவணன் வந்ததால் அவரிடம் குமார், நீதானே என்ன கல்லால் அடிச்சது உண்மையை சொல்லிவிடு என்று கேட்டுள்ளார். இதற்கு சரவணன் மறுத்த நிலையில், அப்போ என்னை அடிச்சவங்க யாருன்னு உனக்கு தெரியும், அதையாவது சொல், என்னிடம் மறைக்க வேண்டும் என பார்க்காதே என கேட்டு சரவணனை வழிமறித்து வாக்குவாதம் செய்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் குமார் அவருடைய நண்பர்களுக்கு போன் செய்து வரவழைத்துள்ளார்.

அங்கு வந்த குடிபோதையில் இருந்து அதே பகுதியை சேர்ந்த பார்த்திபன்,இளையராஜா மற்றும் சந்திரசேகர் ஆகிய மூவரும் இணைந்து சரவணனை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் தரதரவென இழுத்துச் சென்று அவர்கள் வீட்டில் உள்ள வேப்ப மரத்தில் கட்டி வைத்து யார் அடித்தார்கள் என்று சொல் இல்லை என்றால் உன் கையை வெட்டி விடுவேன் என்று சினிமா பாணியில் மிரட்டி இரண்டு கைகளிலும் உள்ள கை விரல்களை வெட்டியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சரவணன் ரத்த வெள்ளத்தில் சித்ரவதை அனுபவித்து கொண்டிருந்தான். உடனே சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் போதை ஆசாமிகளை தடுக்காமல் வேடிக்கை பார்த்தனர்.

ஒரு கட்டத்தில் அவர்களுடைய அட்டகாசம் அதிகமான நிலையில் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போலீஸ் வருவதற்கு முன்பாகவே அங்கிருந்து அனைவரும் தப்பிச்சென்று விட்டனர். பிறகு சரவணன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாகியுள்ள மூன்று பேரையும் தொலைபேசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“106 சீட்கள்.. இன்னும் 13 தான் பாக்கி” திரைமறைவில் நடக்கும் மெகா டீல்.. தவெக-விற்கு ஆதரவாக காங்கிரஸ்… தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு..!!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…

6 மணத்தியாலங்கள் ago

அமைதியாக வந்து அரியணையைத் தூக்கிய அணில்கள்! ஸ்டாலினையே வீழ்த்திய விஜய்யின்

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…

6 மணத்தியாலங்கள் ago

“வேலை செய்யும் இடத்திற்கே வந்து” கணவர் செய்த அந்த காரியம்… மேடையிலேயே பகிர்ந்த மனைவி… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!

பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…

9 மணத்தியாலங்கள் ago

BREAKING: இன்னும் சற்று நேரத்தில் பதவியை ராஜினாமா செய்கிறார் ஸ்டாலின்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…

9 மணத்தியாலங்கள் ago

“எவ்வளவு தான் பொறுத்துக்கொள்வேன்? காதலனைச் சுட்டுக்கொன்ற தாய்… 10 வயது மகளுக்கு 2 ஆண்டாக நடந்த பயங்கரம்… உறைந்து போன போலீஸ்..!!

திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…

9 மணத்தியாலங்கள் ago

திராவிட அரசியலில் மெகா அதிரடி..! திமுக – அதிமுக கைகோர்க்குமா..? தொங்கு சட்டசபை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்..!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…

9 மணத்தியாலங்கள் ago