உத்தரபிரதேச மாநிலம் லக்னோவின் லௌலாய் சின்ஹாட்டில் வசிக்கும் ஜான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அக்ஷிதா சிங், பால்ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்வர்தன் என்ற இளைஞருடன் காதல் வயப்பட்டுள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினர், ஆனால் ராஜ்வர்தன் மற்றும் அவருடைய குடும்பத்தினரும் இந்த உறவில் விருப்பமில்லை என்று கூறப்டுடுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று காதலன் ராஜ்வர்தன் காதலி அக்ஷிதா சிங்கை ஒரு தாபாவில் சந்திக்க அழைத்தார். இதனால் காதலி அக்ஷிதா சிங் புதன்கிழமை இரவு 12:30 மணிக்கு ராம்நகர் காவல் நிலையப் பகுதியில் உள்ள ராயல் தாபாவை அடைந்தார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, காதலன் ராஜ்வர்தன் தனது சகோதரர் கவுரங் மற்றும் சகோதரி நிஷியுடன் காரில் அங்கு வந்தார். அவர்கள் தாபாவை அடைந்தவுடன், மூவரும் அக்ஷிதாவை ஈவு இரக்கமின்றி அடிக்கத் தொடங்கினர். தனது காதலனின் அழைப்பின் பேரில் வந்த காதலியை, அவரது காதலன் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடூரமாக தாக்கினர். இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. காதலியின் புகாரின் பேரில், குற்றம் சாட்டப்பட்ட காதலன், அவரது சகோதரர் மற்றும் சகோதரி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
புதிதாக நடத்தப்பட்ட BNCAP மோதல் சோதனையில், ரெனால்ட் டஸ்டர் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு கார்களுமே முழுமையான 5…
தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த தனது சொத்து விவரங்கள் குறித்த விவாதங்கள்…
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகள் தங்கள் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பாமக…
தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பொறுப்பிலிருந்து டிம் குக் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்குப்…
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே காதல் திருமணம் செய்துகொண்ட கல்லூரி மாணவி, கணவர் செல்போன் அழைப்பை ஏற்காத விரக்தியில் தற்கொலை…