#image_title
எதற்கும் துணிந்தவன் படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக சூர்யாவின் படங்கள் வெளிவராமல் உள்ளது. இந்த ஒன்றரை வருடங்களாக சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் கங்குவா படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சூர்யா. 10 மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
#சூர்யா
இதற்கிடையில் நேரடியாக ஹிந்தி படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. Rang de basanti 6, bhaag milkha bhaag போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் ஓம்பிரகாஷ் மெஹ்ரா. இவர் மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்க இருக்கும் படத்தில் தான் சூர்யா நடிக்க இருக்காராம். மகாபாராத கதையில் வரும் கர்ணன் கேரக்டரை மையப்படுத்தி இரண்டு பாகங்கள் கொண்ட படமாக இது உருவாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
#சூர்யா_ஓம் பிரகாஷ் மெஹ்ரா
பான் இந்தியா படமாக உருவாகும் இப்படத்தில் நடிக்க பாலிவுட் நடிகர், நடிகைகள் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் வேளையில், இயக்குநரின் பார்வை நடிகர் சூர்யா மீது விழுந்துள்ளது. 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் பாலிவுட் நடிகை ஜான்வி கபூரும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 15-ம் தேதியில் இருந்து இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும், முதற்கட்ட படப்பிடிப்பை விரைவில் தொடங்கி முடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசியல் களத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் இயக்குநர் சுந்தர் சி இடையேயான மோதல், தற்போது கொள்கை…
பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒருங்கிணைந்து நடத்தி வரும் தீவிரத் தாக்குதல்களில், ஈரானின்…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றத்தால் உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) முடக்கப்பட்டுள்ளது.…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தலைநகர் சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) எழுச்சி ஆளுங்கட்சியான…
தூத்துக்குடி சங்கராபுரத்தைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மகள் ரேவதிக்கும் (24), ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த சுரேஷ்குமாருக்கும் (25) காதல்…
நாசிக் டிசிஎஸ் (TCS) நிறுவனத்தின் பிபிஓ பிரிவில் பெண் ஊழியர்களுக்கு எதிராக அரங்கேறியுள்ள பாலியல் மற்றும் மத ரீதியான அத்துமீறல்கள்,…