சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில், பல கட்சிகள் பல்வேறு யூகங்களை வகுத்து தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். திமுக கடந்த தேர்தலைப் போலவே 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும், அதே கட்சிகளுடன் எதிர்கொள்ள உள்ளது. திமுக கூட்டணியில் புதுவரவாக மக்கள் நீதி மய்யம் இணைந்துள்ள நிலையில், மேலும் சில கட்சிகள் இணையலாம் என கருதப்படுகிறது.
அதேபோல் இனி எந்த தேர்தலிலும் பாஜகவுடன், அதிமுகவுக்கு கூட்டணி கிடையாது என்று கூறிய பழனிச்சாமி, டெல்லி சென்று வந்த கையோடு, பாஜகவுடன் கூட்டணி என்ற திடீர் அறிவிப்பை வெளியிட்டார். இதற்கு முக்கிய காரணம், பாஜகவுடன் கூட்டணி அமைத்தால், அமலாக்கத்துறை மூலம், திமுகவிற்கு நெருக்கடி கொடுக்கலாம் என்ற திட்டத்துடன் பழனிச்சாமி இந்த முடிவை எடுத்தார். இப்போது பாஜக தனது அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்து, சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக வழக்கில், தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திண்டுக்கல் ஐ பெரியசாமிக்கு, சொந்தமான இடங்களில் அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பெரியசாமியின் மகன் ஐபி செந்தில் குமார் (பழனி எம்.எல்.ஏ),மகள் இந்திரானிஇல்லத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். தகவலறிந்து, திமுகவினர் மற்றும் ஐ.பெரியசாமி ஆதரவாளர்கள் வீட்டின் முன்பாக குவிந்துள்ளனர்.
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…
தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…