Categories: சினிமா

அந்த ஒரு வரி மட்டும் செட் ஆகல.. வைரமுத்துவுக்காக ஒரு நாள் முழுதும் காத்திருந்த பிரபல இயக்குனர்..!!

Spread the love

பிரபல இயக்குனரான பாரதிராஜா 16 வயதினிலே திரைப்படம் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இந்த படம் 1977-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. அதன் பிறகு கிழக்கே போகும் ரயில், சிவப்பு ரோஜாக்கள், நிறம் மாறாத பூக்கள், அலைகள் ஓய்வதில்லை, மண்வாசனை, முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், கிழக்கு சீமையிலே உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார். பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1987-ஆம் ஆண்டு வேதம் புதிது திரைப்படம் ரிலீஸ் ஆனது.

 

இந்த படத்தில் சத்யராஜ் ஹீரோவாக நடித்தார். அமலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்த படத்திற்கு தேவேந்திரன் இசை அமைத்தார். வேதம் புதிது படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது வழங்கப்பட்டது. இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். வேதம் புதிது படத்தில் இடம்பெற்ற மாட்டு வண்டி சாலை பாடலை மலேசியா வாசுதேவன் பாடியுள்ளார். இந்த பாடலை கவிப்பேரரசு கண்ணதாசன் எழுதினார். படத்தின் போக்கிற்கு ஏற்றவாறு பாடல் வரிகள் அமைந்திருக்கும்.

கவிஞரின் பாடல் வரிகளுக்கு ஏற்ப தேவேந்திரன் இசை அமைத்துள்ளார். மாட்டுவண்டி சாலையிலே பாடலில் இடம் பெற்ற ஒரு வரியை மட்டும் மாற்ற பாரதிராஜா விரும்பினார். பச்சைக்கிளி இரண்டும் பண்ணி வைத்த பாவம் என்ன என்ற வரிகளை மாற்ற வேண்டும் என பாரதிராஜா நினைத்தார். இதனால் கவிஞரை தொடர்பு கொள்ள முயற்சி செய்தார். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. பாரதிராஜா நினைத்தால் அவரே அந்த வரிகளை மாற்ற முடியும்.

ஆனால் அப்படி செய்யாமல் வைரமுத்துவிற்காக  காத்திருந்தார். சுமார் 6,7 மணி நேரம் கழித்து தான் வைரமுத்துவை தொடர்பு கொள்ள முடிந்தது. உடனே அவரிடம் விஷயத்தை கூறி ஸ்டூடியோவுக்கு வர வைத்துள்ளார். அன்று ஒரு நாள் முழுவதும் அந்த ஒரு வரிக்காக பாரதிராஜா காத்துக் கொண்டிருந்தார், இதனை அடுத்து வைரமுத்து வந்ததும் பச்சைக்கிளி இரண்டும் பண்ணி வைத்த பாவம் என்ன என்ற வரிகளை மாற்றி சின்ன கிளி இரண்டும் செய்துவிட்ட பாவம் என்ன என மாற்றி கொடுத்தார். பாரதி ராஜா நினைத்தபடி பாடலும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

admin

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

4 மணத்தியாலங்கள் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

4 மணத்தியாலங்கள் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

6 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

6 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

6 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

6 மணத்தியாலங்கள் ago