நடிகர் வடிவேலு, தமிழ் சினிமாவில் காமெடி சக்ரவர்த்தியாக ஒரு காலகட்டத்தில் வலம் வந்தவர். படத்தின் ஹீரோ, ஹீரோயின், டைரக்டர் கடந்து அந்த படத்தில் வடிவேலு நடித்திருக்கிறாரா என ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு, புகழ்பெற்ற காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் இருந்தார். ஆனால், இப்போது அவரை பற்றிய பல புகார்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. உடன் நடித்த காமெடி நடிகர்களை வளரவிடாமல் தடுத்தவரே அவர்தான் என்றும் குற்றச்சாட்டு வலுத்து வருகிறது. வடிவேலுவுடன் ஐயா, வெற்றிக்கொடி கட்டு, பகவதி உள்ளிட்ட படங்களில் பெஞ்சமின் நடித்திருந்தார்.
சமீபத்தில், நடிகர் பெஞ்சமின் ஒரு நேர்காணலில் கூறியதாவது, வெற்றிக்கொடி கட்டு படத்தில், நான் வடிவேலுடன் ஒரு காட்சியில் நடித்தேன். அதாவது வடிவேலுவை கெட்ட வார்த்தைகளில் கண்டபடி திட்ட வேண்டும். அப்படி என்னால் திட்ட முடியவில்லை. நான்கைந்து கேன் பிக்சர் ரோல் வீணாகி விட்டது. 75 ஆயிரம் ரூபாய் வரை வீணாகி விட்டது. சேரனும், பார்த்திபனும் என்னிடம் வந்து, ஏன் தொடர்ந்து கெட்டவார்த்தை பேசவில்லை என்றனர். அதற்கு கேமராவுக்கு பின்னால் நீங்கள் இருக்கிறீர்கள். ஆனால், முன்னால் வந்து பாருங்கள். வடிவேலு, என்னை பேசவிடாமல் மிரட்டுகிறார், என்று சொன்னேன்.
அதன்பிறகு, வடிவேலுவை காரில் ஏற்றி அனுப்பி விட்டார்கள். அவர் வருவதற்குள் பேச வேண்டிய கெட்டவார்த்தைகளை எல்லாம் பேசி நடித்து விட்டேன். வடிவேலுவை திட்டி எப்படி கெட்ட வார்த்தைகள் பேச வேண்டும் என்று எனக்கு அப்போது பார்த்திபன் தான் கற்றுக்கொடுத்தார். படத்தில் காட்சி அப்படி வருகிறது. அதனால் தைரியமாக பேசுங்கள் என்று பார்த்திபன் தைரியம் கொடுத்தார். காரில் போய்விட்டு வந்த வடிவேலு, என்னை மிரட்டும் தொனியிலேயே பேசிக்கொண்டு இருந்தார். வடிவேலுவின் உண்மையான குணமே அதுதான். கேமராவுக்கு முன்னால் அவர் நடிப்பது, வெறும் நடிப்பு மட்டுமே என கூறி இருக்கிறார் நடிகர் பெஞ்சமின்.