பாக்கியாவிடம் மாட்டிக்கொண்ட செழியன்… அப்பனை போலவே பிள்ளையும் செய்த வேலை … ‘பாக்கியலட்சுமி’ சீரியல் டுடே அப்டேட்…

By Begam

Published on:

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் தற்பொழுது பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. கணவனால் கைவிடப்பட்டு தனது குடும்பத்தை சொந்த காலில் நின்று பார்த்து கொள்ளும் பெண்ணாக, ஒரு பாசமான அம்மாவாக பாக்கியா கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார். தற்பொழுது அவர் தனது மகன்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை எவ்வாறு தீர்க்க போகிறார் என்பதை பற்றி தான் கதைக்களம் சென்று கொண்டிருக்கிறது.

   

இன்றைய நாளில் ‘ கோவிலுக்கு போய் மாலினியை பார்த்த பாக்கியா திரும்ப வீட்டிற்கு வருகிறார். அங்கு இனியாவிற்கு காய்ச்சல் என்பதால் குடும்பமாக ஒன்றாக அமர்ந்துள்ளனர். செழியனிடம் ‘ உன்கிட்ட கொஞ்சம் பேசணும் வா ‘என்று தனியாக கூட்டிட்டு போய், ‘நான் மாலினிய பார்த்து பேசிட்டு தான் வரேன். அவ என்ன என்னவோ சொல்றா. இந்த போன் முழுக்க மாலினி போட்டோ தான் இருந்தது. பத்தாததுக்கு இப்ப அவ்வளவு போட்டோ அனுப்பி இருக்கா’.


‘ஜெனி மாதிரி ஒரு பொண்ணு உனக்கு கிடைச்சதே ரொம்ப பெரிய விஷயம். அவ என்ன பண்ணுனா? உன்னை எவ்வளவு நம்புறா? அவளை ஏமாத்த உனக்கு எப்படி மனசு வந்தது. அப்பனுக்கு புள்ள தப்பாம பிறந்திருக்க. உங்க அப்பா புத்தி அப்படியே உனக்கு இருக்கு’ என்று திட்டிகிறார்.’ மரியாதையா ஜெனி கிட்ட நடந்த எல்லா உண்மையை சொல்லு அதுக்கப்புறம் அவ உன்ன ஏத்துக்கிட்டா இங்க இருக்கலாம்.

இல்லனா நீ வெளியே போயிடலாம். ஜெனி என்ன முடிவு எடுக்கிறாளோ நான் அவ பக்கத்துல தான் நிப்பேன்’ என பாக்கியா கூற செழியன் என்ன செய்வது என தெரியாமல் முழிக்கிறார். இப்படி ஒரு பக்கம் செழியனின் வாழ்க்கை மாலினியை வைத்து ஒருபுறம், எழிலின் வாழ்க்கை கணேஷை வைத்து மறுபுறம் என தனது இரண்டு பிள்ளைகளின் வாழ்க்கையையும் காப்பாற்ற போராடி வருகிறார் பாக்கியா. இனி என்ன நடக்க போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.