நேற்று (ஏப்.18) நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் ஹைதராபாத் அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது. இப்போட்டியில் சென்னை அணியின் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களைக் குவித்துக் கொண்டிருந்தார். சிஎஸ்கே ரசிகர்களுக்கு நம்பிக்கையளித்த மாத்ரேவுக்கு, ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் திடீரென தசைப்பிடிப்பு (Cramp) ஏற்பட்டது. இதனால் அவரால் களத்தில் சரியாக ஓட முடியாமல் போனதுடன், அடுத்த சில பந்துகளிலேயே தனது விக்கெட்டையும் பறிகொடுத்தார். இந்தத் திருப்புமுனை போட்டியின் முடிவை சென்னைக்கு எதிராக மாற்றியது.
இந்நிலையில், ஆயுஷ் மாத்ரேவின் காயம் தற்போது சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. பரிசோதனைக்குப் பிறகு அவரது காயத்தின் தன்மை தீவிரமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், இந்த ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து அவர் விலக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் இருந்த மாத்ரே தொடரிலிருந்து விலகுவது, பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறத் துடிக்கும் சென்னை அணிக்கு மிகப்பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சென்னை அணி நிர்வாகம் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய தலைநகர் டெல்லியின் வடமேற்கு மாவட்டத்திலுள்ள ஆதர்ஷ் நகர் பகுதியில், நள்ளிரவில் நடந்த ஒரு காவல்துறை நடவடிக்கையின் போது இரண்டு…
தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தமிழக வெற்றிக்…
பெங்களூருவில் இருந்து துமாகுருக்கு காரில் சென்றபோது, பெண்ணை அவருடன் வந்த நபர் கத்தியால் குத்திய நிலையில், காரை வெடிக்கச் செய்து…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் முதலமைச்சர் விஜய் தலைமையில் புதிய அரசு பதவியேற்றுள்ளது. ஆட்சி…
தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் அடையாள அட்டைகளில் இனிமேல் சாதிப் பெயர் இடம் பெறாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிரடியாக…
நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி, திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்து வரும் திரைப்படம் 'மா இன்டி பங்காரம்'. சமந்தாவின்…