#image_title
தமிழ் சினிமாவில் 40 களில் இருந்து 70 களின் இறுதிவரை தொடர்ச்சியாக படங்கள் எடுத்து இந்தியா முழுவதும் அவற்றை ரிலீஸ் செய்து வெற்றிகொடி நாட்டிய நிறுவனம் ஏவிஎம். அந்த நிறுவனத்தின் நிறுவனர் ஏ வி மெய்யப்ப செட்டியார் இறந்த போது சில ஆண்டுகள் அவர்கள் படம் தயாரிக்காமல் இருந்தனர்.
இந்நிலையில் ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமா தயாரிப்பில் இறங்கிய ஏவிஎம் நிறுவனம் முதல்படமாக முரட்டுக்காளை படத்தை ரஜினியை வைத்து தயாரித்தது. இந்த படத்தை வித்தியாசமாக கமர்ஷியலாகக் கொண்டு செல்லவேண்டுமென ஏவிஎம் நிறுவனம் விரும்பியுள்ளது.அதனால் அப்போது முன்னணியில் இருந்த கலைஞர்களை எல்லாம் அந்த படத்துக்காக ஒப்பந்தம் செய்தனர்.
படத்தின் இயக்குனராக எஸ் பி முத்துராமன், கதாசிரியராக பஞ்சு அருணாசலம் மற்றும் இசையமைப்பாளராக இளையராஜா ஆகியோரை ஒப்பந்தம் செய்திருந்தனர். அதற்கு முன்பு வரை ஏவிஎம் நிறுவனத்தில் ஷூட்டிங் செல்வதற்கு முன்னர் முழு திரைக்கதையும் எழுதப்பட்டு, அது உறுதி செய்யப்பட்ட பின்னரே ஷூட்டிங் செல்வார்கள்.
ஆனால் முரட்டுக் காளை படத்துக்கு முதலில் 10 காட்சிகள் எழுதி அனுப்பி அதை ஷூட் செய்வார்களாம். பின்னர் சில காட்சிகள் எழுதி வந்து அது படமாகுமாம். இதைப் பார்த்து ஷாக் ஆன ஏவிஎம் குமரன் ‘என்ன இப்படி துண்டு துண்டாக எழுதி ஷூட் செய்கிறீர்கள்’ எனக் கேட்டுள்ளார். அதற்கு இயக்குனர் முத்துராமன் ‘இப்ப எல்லாம் இதுதான் ட்ரண்ட்’ எனக் கூறியுள்ளார்.
அதே போல ஏ வி எம் நிறுவனம் தயாரிக்கும் படங்களில் இடம்பெறும் பாடல்களை இசையமைப்பாளர்களிடம் இருந்து வாங்கி அதை ஓகே செய்வதும் குமரனின் பொறுப்பில் இருந்ததாம். ஆனால் இளையராஜா அந்த படத்தின் பாடல்களுக்கான மெட்டுகளை கேசட்டில் பதிவு செய்து அனுப்பிவிட்டாராம். இதுவும் குமரனுக்கு மிகவும் அதிர்ச்சியாக ஒன்றாக இருந்ததாம். ஆனால் இளையராஜா மற்றும் முத்துராமன் ஆகியோர் மீதிருக்கும் நம்பிக்கையால் அவர்களின் போக்குக்கே விட்டுவிட்டாராம். அவர்கள் சொன்னது போலவே முரட்டுக்காளை படத்தை வெற்றிப்படமாக எடுத்துக் கொடுத்துவிட்டார்கள்.
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…
நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…
நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…
பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…
80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…