கடந்த 2006-ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியான கலாப காதலன் திரைப்படத்தின் மூலமாக சினிமாவுக்கு கலை இயக்குனராக அறிமுகமானவர் மிலன். இதனையடுத்து மிலன் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். நடிகர் அஜித் நடிக்கவிருக்கும் விடாமுயற்சி படத்தை பிரபல இயக்குனர் மகில் திருமேனி இயக்குகிறார்.
இந்நிலையில் அர்பைஜான் நாட்டில் ஆக்சன் காட்சிகளுடன் விடாமுயற்சி படபிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, ஹுமா குரேஷி, அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.
இந்நிலையில் படபிடிப்பிற்காக அஜித் உள்பட பட குழுவினர் வெளிநாட்டிற்கு சென்றுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த படம் குறித்த தலைப்பு மட்டுமே வெளியானது. அதன் பிறகு படம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர். இந்நிலையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடாமுயற்சி படத்தின் படபிடிப்பு தொடங்கியது.
இந்நிலையில் விடாமுயற்சி படபிடிப்புக்காக ஹோட்டல் அருகில் தயாராகி கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மிலனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக படக்குழுவினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மிலன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் விடாமுயற்சி பட குழுவினரும் திரை பிரபலங்களும் அதிர்ச்சியில் உள்ளனர். மிலன் பாதியில் விட்ட பணிகளை அவரது மகன் மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில், ஒருதலைக் காதலால் நிகழ்ந்த கொடூரமான பழிவாங்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னைத் திருமணம் செய்து…
தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த 15 ஆண்டுகள் என்பது வெறும் ஆட்சி மாற்றங்களை மட்டுமல்ல, வாக்காளர்களின் மனநிலையிலும் பெரும் முதிர்ச்சியை…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இன்று அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு - ஓசூர்…
உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டத்தில், குடும்பச் சண்டையின் உச்சக்கட்டமாக ஐந்து மாதப் பச்சிளம் குழந்தையைத் தந்தையே மாடியிலிருந்து வீசிக்…
அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளைத் திரும்ப வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…
மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், 25 வயது இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து…