தமிழ் சினிமாவில் இளையராஜா, எம்எஸ் விஸ்வநாதன், கேவி மகாதேவன், டி ராஜேந்தர் போன்றவர்கள் இசை சக்ரவர்த்திகளாக தங்களது இசை திறமையை, அவர்கள் பணிபுரிந்த படங்களில் வெளிப்படுத்தியவர்கள். இப்போதும் அவர்கள் இசைத்த பாடல்களை கேட்டால், காதுகளுக்கு மட்டுமல்ல, மனதையும் மிதமாக்கும். மனக்கவலைகளை மறக்க செய்யும். குறிப்பிட்ட சில பாடல்களை கேட்டால் மனம் மிக லேசாகும். அப்படிப்பட்ட சாகாவரம் பெற்ற பாடல்களை அவர்கள் தமிழ் சினிமாவுக்கு தந்திருக்கின்றனர்.
இந்த இசை ஜாம்பவான்கள் இளையராஜா, எம்எஸ்வி, கேவி மகாதேவன், டி ராஜேந்தர் ஆகியோரிடம் பணிசெய்தவர் இசைப்புயல் ஏஆர் ரகுமான் என்றால் அது மிகுந்த ஆச்சரியம் தருகிற ஒரு விஷயமாகதான் இருக்கிறது. மிக இளம் வயதில், பதின் பருவ காலத்தில் கீ போர்டு பிளேயராக இவர்களிடம் பணிசெய்திருக்கிறார் ஏஆர் ரகுமான். ஆனால் அப்போது அவரது பெயர் திலீப் என்பது பலருக்கும் தெரியாது. அன்று சிறுவனாக அந்த இசைஞானி, மெல்லிசை மன்னர்களிடம் இசை கற்றவர்தான் இன்று இசைப்புயலாக ஏ ஆர் ரகுமானாக ரசிகர்கள் முன் வெற்றி பெற்று ஆஸ்கர் நாயகனாக சிகரம் தொட்டு இருக்கிறார்.
இதுகுறித்து சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏஆர் ரகுமான் மேடையேறி பேசுகையில், டி ராஜேந்தர் சார் என்னை இன்ஸ்பிரேசன் செய்த மனிதர்களில் மிக முக்கியமானவர். இளையராஜா, எம்எஸ்வி, கேவி மகாதேவன், நான் இவர்களிடம் வேலை செய்திருக்கிறேன். ஆனால் இவர்கிட்ட நான் இருந்தப்போ, நிறைய விஷயங்களை கத்துக்கிட்டேன். இவர் ஒர்க் பண்ணின ஸ்டைலை பார்த்து எனக்குள்ள இருந்த கூச்சம், வெட்கப்படுகிற தன்மை எல்லாம் போய், வெளிப்படையாக என்னை இருக்க வைத்தது. மற்றவர்களிடம் சகஜமாக பேச வைத்தது அவரோட இன்ஸ்பிரேசன்தான் என்று வெளிப்படையாக கூறினார் ஏஆர் ரகுமான். அந்த விழாவில் டி. ராஜேந்தர், சிலம்பரசன் போன்றவர்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர்…
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் 3000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டு வருகிறது.…
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வரும் நிலையில், அக்கட்சிக்கு ‘விசில்’ சின்னம்…
பிக் பாஸ் தமிழ் சீசன் 9-ல் அனைவரையும் கவர்ந்த போட்டியாளரான கானா வினோத், இறுதிப் போட்டி வரை செல்லும் வாய்ப்பு…
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஆளுங்கட்சியான திமுக ஒரு நூதனமான தேர்தல் வியூகத்தைக் கையில் எடுத்துள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும்…
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெறுவதற்காகச் சென்ற மூதாட்டி ஒருவர், எதிர்பாராத…