சன் தொலைக்காட்சியில் 2002 ல் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல் அண்ணாமலை. இந்த சீரியலின் மூலம் சின்னத்திரையில் கால் பதித்தவர் நடிகை பூஜா. சீரியல்களின் படபிடிப்பில் பயங்கர சேட்டையும், குறும்புதனமும் செய்துகொண்டே இருப்பாராம். இதனால் இவருக்கு குட்டி பூஜா என்ற பட்டப்பெயரும் உள்ளது.
இதைத்தொடர்ந்து, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டில் வின்னரானார்.இதைத்தொடர்ந்து, பல சீரியல்களில் வாய்ப்பு கிடைக்க பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார் பூஜா.
இதைத்தொடர்ந்து மது என்பவரை திருமணம் செய்துகொண்டு கனடா நாட்டில் செட்டிலானார் பூஜா. திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு குடும்பத்தை மட்டும் கவனித்துக் கொண்டார். தற்போது இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர்.
அவரது மூத்த மகளுக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை உள்ளதாம், அவர் படிப்பு முடித்து நடிக்க விரும்பினால் கண்டிப்பாக அதற்காக தான் உதவுவேன் என்றும் பூஜா கூறியிருக்கிறார். இவர் தற்பொழுது கனடாவில் டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் பணிபுரிந்து வருகிறார்.
இவர் சீரியல்களில் நடிக்க வில்லை என்றாலும் கனடாவிலிருந்து தமிழ் சீரியல்கள் எல்லாம் பார்ப்பதாகவும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடிமை என்றும் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். தற்பொழுது கனடாவில் வசிக்கும் இவரது குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக…
தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், சிபிஎம் (CPM) கட்சி திமுக கூட்டணியிலேயே தொடர்ந்து நீடிப்பதாக அக்கட்சியின்…
தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் திருப்பம், வெறும் ஆட்சி மாற்றமாக மட்டுமல்லாமல், ஒரு மிகப்பெரிய அதிகார மைய மாற்றமாகவும்…
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை நோக்கி 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நகர்ந்துள்ளன. 108 இடங்களைக் கைப்பற்றி…
பனையூரில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், தனது கட்சியின் 4 சட்டமன்ற உறுப்பினர்களுடன்…
"ஜாக்கோ ரகே சையன், மார் சகே நா கோயி" என்ற பழமொழிக்கேற்ப, மரணத்தின் பிடியிலிருந்து இரண்டு முறை மீண்டு வந்து…