பனையூரில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், தனது கட்சியின் 4 சட்டமன்ற உறுப்பினர்களுடன் இன்று அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஜான் ஆரோக்கியசாமி மூலமாக பாமகவிற்கு ஆதரவு கோரி அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு மிகுந்த அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) அங்கம் வகித்து வரும் பாமக, வரும் காலங்களில் அக்கூட்டணியிலேயே நீடிப்பதா அல்லது விலகி புதிய அரசியல் கணக்குகளைத் தொடங்குவதா என்பது குறித்துத் தனது எம்.எல்.ஏ-க்களின் கருத்துக்களை அன்புமணி கேட்டறிந்ததாகத் தெரிகிறது. விஜய்யின் இந்தத் திடீர் அழைப்பால் தமிழக அரசியலில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், பாமகவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு குறித்த அறிவிப்பை அன்புமணி விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இயற்கையில் நீர்வாழ் பறவைகள் மீன் பிடிக்கும் விதம் எப்போதும் ஆச்சரியமானது. அந்த வகையில், நீர் காகம் ஒன்று ஒரு பெரிய…
நாசிக் நகரில் இயங்கி வந்த தனியார் பயிற்சி மையத்தில், மாணவி ஒருவர் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்…
குஜராத் மாநிலம் சோட்டா உதய்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், வீட்டில் தனியாக இருந்த முதியவர் ஒருவரை குறிவைத்து கொடூரமான…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் நகர்வுகள் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியமைக்க பாமக…
தமிழ்த் திரையுலகின் முன்னணித் தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் உரிமையாளர் ஆர்.பி. சௌத்ரி, நடிகர் விஜய்யின் ஆரம்பகால வளர்சியில்…
பீகாரின் தலைநகரான பாட்னாவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில், ஜெஹானாபாத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார் சர்மா என்ற இளைஞர் சந்தேகத்திற்கிடமான…