NDA கூட்டணியை விரிவு படுத்தும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் அமித்ஷாவை சந்தித்து திரும்பிய பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை முக்கியமான விளக்கத்தை கொடுத்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, அமித்ஷா, நட்டா போன்றவருடன் நடந்த ஆலோசனைகள் பற்றி பொதுவெளியில் பகிர முடியாது என்று கூறினார். மேலும் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை சந்தித்தது தொடர்பாக எழுந்த அரசியல் ஊகங்களுக்கும் பதில் அளித்த அண்ணாமலை, அவர்களை சந்தித்தது முற்றிலும் நட்பு ரீதியிலானது. டிடிவி தினகரன் என் சொந்த ஊருக்கு வந்ததால் இரவு உணவுக்கு அழைத்தேன். அதற்கு மேல் அரசியல் அர்த்தம் ஒன்றும் இல்லை.
NDA கூட்டணியில் யார் வரவேண்டும் வரக்கூடாது என்பதற்கான தீர்மானத்தை தேசிய தலைமை மட்டுமே எடுக்கும். கூட்டணியின் தமிழ்நாடு நிலைமை பற்றி எடப்பாடி பழனிச்சாமியும் நைனார் நாகேந்திரனும் ஆலோசித்து முடிவெடுப்பார்கள். 2026 தேர்தலை முன்னிட்டு தேமுதிக மற்றும் பாமக போன்ற பல கட்சிகள் இன்னும் கூட்டணிக்கு வராத நிலையில் NDA வலிமையாக இருக்க வேண்டும் என்பதை என் விருப்பம். அதற்காக உள்ளரங்கில் நான் என்னுடைய கருத்துக்களை சொல்ல முடியும். ஆனால் இறுதி முடிவு எடுக்கும் இடத்தில் நான் இல்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். இவருடைய இந்த பேச்சு தற்போது தமிழக அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ளது.
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…
தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…