#image_title
தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் முன்னணி நடிகராக இருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். மிமிக்ரி ஆர்டிஸ்டாக தனது பயணத்தை தொடங்கிய இவ்வாறு தற்போது முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார். இவருடைய நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம் தான் அமரன். நம் நாட்டிற்காக வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்த இந்த திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார்.
கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்து இருந்த நிலையில் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை பார்த்த சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் பிரபலங்கள் வரை அனைவருமே சிவ கார்த்திகேயனை பாராட்டி உள்ளனர்.
சமீபத்தில் ராஜ்நாத் சிங் அவர்களை சந்தித்து பாராட்டும் பெற்றனர். அதேபோல சென்னையில் உள்ள ராணுவ குழு சிவகார்த்திகேயனை அழைத்தும் கௌரவப்படுத்தினர். ராணுவ வீரர்களும் இந்த திரைப்படத்தை பாராட்டியுள்ளனர். இப்படியான நிலையிலும் படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு தொடர்ந்து கிடைத்து வருகிறது.
படம் முதல் நாளில் 42.3 கோடி வசூல் செய்திருந்த நிலையில் நாளுக்கு நாள் காட்சிகள் அதிகரிக்கப்பட்டதால் வசூல் சிறப்பாக இருந்தது. உலகளவில் 300 கோடி வசூல் சாதனை படைத்தது. படத்தை ரிலீஸ் செய்த எல்லா இடத்திலும் அமோகமான வரவேற்பு கிடைத்துள் நிலையில் தற்போது அமரன் படத்தின் திரையரங்க லாபம் மட்டுமே ரூ. 100 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…