தமிழக அரசியலில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பது புதிய திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பயணத்தின் தொடக்கத்திலேயே, தான் தேர்தலில் போட்டியிடப் போவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிரடியாக அறிவித்துள்ளார். குறிப்பாக, மறைந்த கேப்டன் விஜயகாந்த் வெற்றி பெற்று சாதனை படைத்த ரிஷிவந்தியம் தொகுதியிலேயே அவர் களம் காண்பார் என அரசியல் வட்டாரங்களில் பலத்த பேச்சு எழுந்துள்ளது. இது கூட்டணிக் கணக்குகளைத் தாண்டி, அந்தத் தொகுதியின் தற்போதைய கள நிலவரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரிஷிவந்தியம் தொகுதியின் தற்போதைய திமுக எம்.எல்.ஏ, இந்தத் தகவலால் கடும் கலக்கத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. தனது தொகுதியில் கடந்த சில ஆண்டுகளாகப் பல்வேறு மக்கள் நலப்பணிகளைச் செய்து, மீண்டும் போட்டியிடத் தயாராகி வந்த நிலையில், கூட்டணி ஒப்பந்தத்தால் தனது வாய்ப்பு பறிபோகுமோ என்ற அச்சம் அவரிடம் எழுந்துள்ளது. இதுமட்டுமன்றி, எம்.எல்.ஏ-வின் ஆதரவாளர்களும் இந்த முடிவால் அதிருப்தியில் உள்ளதாகத் தெரிகிறது. “கடும் உழைப்பைக் கொடுத்த தங்களுக்கு முன்னுரிமை அளிக்காமல், கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காகத் தொகுதியை விட்டுக்கொடுப்பது நியாயமல்ல” என்பதே அவர்களின் குமுறலாக உள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…