300 பேர் சுத்தி இருக்க எதையும் கண்டுக்காமல் நடிகரின் காலில் திடீரென விழுந்த அஜித்.. தல என்னைக்குமே கிரேட் தான்-பா..

By Begam

Updated on:

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் துணிவு. இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.  இதைத் தொடர்ந்து நடிகர் அஜித் இயக்குனர் மகிழ் திருமேனியுடன் இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் தற்பொழுது நடித்து வருகிறார்.

   

தற்பொழுது இத்திரைப்படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தை மார்ச், ஏப்ரல் மாதத்திற்குள் எப்படியாவது முடித்துவிட வேண்டும் என படக்குழு தீவிரமாக வேலை பார்த்து வருகிறது. நடிகர் அஜித்தை பற்றி அவ்வப்பொழுது சில விமர்சனங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால் அவர் அவற்றையெல்லாம் கண்டுகொள்வதே கிடையாது.

இந்நிலையில் பிரபல மூத்த நடிகரான டெல்லி கணேஷ் அஜித் குறித்து சில தகவல்களை கூறினார். அஜித்துடன் பல படங்களில் இவர் ஒன்றாக இணைந்து நடித்துள்ளார். அவருக்கும் நடிகர் அஜித்துக்கும்  நல்ல பழக்கம் இருந்துள்ளது. அதாவது டெல்லி கணேஷை அப்பா என்று கூப்பிடும் அளவுக்கு நெருங்கி பழகியுள்ளார் தல.

‘நேர் கொண்ட பார்வை’ படத்தில் நடிக்க டெல்லி கணேஷ் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்துள்ளார். அப்போது  டயலாக் பேப்பரை படித்துக் கொண்டிருந்த அஜித், நடிகர்  டெல்லி கணேஷை அருகில் பார்த்ததும் ‘அப்பா எப்போ வந்தீங்க..? நல்லா இருக்கீங்களா..?’ என கேட்டு 300 ஆர்ட்டிஸ்ட் சுற்றி இருக்க,  எதை பற்றியும் யோசிக்காமல் டெல்லி கணேஷ் காலில் விழுந்தாராம். இதெல்லாம் ரெக்கார்டு. அதனால் டிவி முன்னாடி சொல்லியே ஆகனும்’ என டெல்லி கணேஷ் மனம் திறந்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.