அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அண்மையில் கடுமையாகத் தாக்கிப் பேசியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேட்டியளித்துள்ள அதிமுகவின் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் பசுபதி, “தவெகவின் கைக்கூலியாக சி.வி.சண்முகம் செயல்படுகிறார்; சோஃபா வந்ததும், தவெக தலைவர் விஜய் நேரில் வந்து சந்தித்ததும் உடனே அவர் தவெகவிற்கு ஆதரவு கொடுத்தார்” எனப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
தொடர்ந்து பேசிய பசுபதி, “தற்போது தவெகவில் சி.வி.சண்முகத்தை யாரும் மதிக்காததால், மீண்டும் அதிமுகவிற்கு வருகிறேன், எனக்குப் பொறுப்பு கொடுங்கள் எனக் கேட்கிறார்; இது எவ்விதத்தில் நியாயம்?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி கடுமையாகச் சாடியுள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கும் சி.வி.சண்முகத்திற்கும் இடையிலான இந்த வார்த்தைப் போர், தமிழக அரசியல் வட்டாரத்திலும் குறிப்பாக விழுப்புரம் மாவட்ட அதிமுகவிலும் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பல மாதங்களாகத் தொடர்ந்து வரும் போர் சூழலால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடுமையான பதற்றம்…
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் இணைந்து ஒரு…
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.…
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த 24 வயதான ரெபேக்கா என்பவருக்கும், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பாகப்பிரகாஷ்…
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் பெங்களூரில் உள்ள தனது மையத்திற்காக 'React JS with Python' தொழில்நுட்பங்களில் அனுபவம் கொண்ட…
தமிழக அரசியல் களம் எப்போதும் சுவாரசியங்களுக்கும் திருப்பங்களுக்கும் பஞ்சமில்லாத ஒன்றாகவே இருந்து வருகிறது. அந்த வகையில், கடந்த சட்டமன்றத் தேர்தலில்…