#image_title
தனக்கென தனி பாணியில் பிரம்மாண்ட ஆக்சன் திரைப்படங்களை கொடுத்து வரும் பிரபல இயக்குனர் தான் பிரசாந்த் நீல். இவர் இயக்கத்தில் 2018ல் நடிகர் யாஷ் நடிப்பில் வெளிவந்த ‘கேஜிஎப்’ திரைப்படம் கன்னட சினிமாவை மட்டுமல்ல ,இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது .அந்த அளவிற்கு இத்திரைப்படத்தில் பிரம்மாண்டத்தையும், ஆக்சன் காட்சிகளையும் காட்டி இருந்தார் இயக்குனர் பிரசாந்த் நீல்.
முதல் பக்கத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘கேஜிஎப் இரண்டாம் பாகம்’ வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. வசூலிலும் சக்க போடு போட்டது .தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக பிரபாஸ் மற்றும் பிரித்திவிராஜின் கூட்டணியில் சலார் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
நடிகர் பிரபாஸுடன் இணைந்து பிரித்விராஜ், ஸ்ருதிஹாசன், ஈஸ்வரி ராவ் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர். மேலும் சலார் திரைப்படம் நேற்று மட்டும் உலக அளவில் 160 இந்த கோடி முதல் 175 கோடி வரை முதல் நாள் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் சலார் திரைப்படத்திற்கு பிறகு கே ஜி எஃப் 3 திரைப்படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்க உள்ளார்.
இதைத்தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகர் ஒருவருடன் பிரசாந்த் நீல் கூட்டணி அமைக்க உள்ளார். யார் அந்த நடிகர் தெரியுமா.? அவர் வேறு யாரும் இல்லை நடிகர் அஜித்தான். நடிகர் அஜித் பிரசாந்த் நீலிடம் போன் செய்து ‘நாம் அடுத்த படம் இணைந்து பண்ணலாமா? என்று கேட்க அவரும் உடனே ஒப்புக் கொண்டாராம்’.
#image_title
நடிகர் அஜித் தற்பொழுது விடாமுயற்சி மற்றும் அடுத்தடுத்து ஆதிக், வெற்றிமாறன் என வரிசையாக இயக்குனர்களுடன் கமிட்டாகி இருப்பதால் கே ஜி எஃப்3 திரைப்படத்திற்கு பிறகு, நடிகர் அஜித்தும், இயக்குனர் பிரசாந்த் நீலும் இணைய உள்ளார்களாம். சைலண்டாக அடுத்த பான் இந்திய திரைப்படத்துக்கு ரெடியாகிவிட்டார் நம்ம தல. இதை அறிந்த தல ரசிகர்கள் தற்பொழுது பயங்கர குஷியில் உள்ளனர்.
பாக்கியலட்சுமி சீரியலில் இன்று கோபியின் மாமியாரான கமலா காவல் நிலையத்திற்கு சென்று என்னையும் என் பொன்னையும் கொலை பண்ண பார்க்கிறாங்க…
விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் முத்தழகு சீரியலில் நாயகன் நடிகர் ஆஷிஷ் தனது காதலியை அறிமுகம் செய்திருக்கின்றார். விஜய்…
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ராஜூ தற்போது புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கின்றார். தமிழ் சினிமாவில் ஒரு…
நடிகை அதிதி ராவ் விருது வழங்கும் விழாவிற்கு சென்றிருந்த நிலையில் அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார்.…
நடிகை நிவேதா பெத்துராஜ் தனது காதலன் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். தமிழ்…
நடிகை அமலாபால் தங்களிடம் மனிதாபிமானமே இல்லாமல் நடந்து கொண்டதாக பிரபல மேக்கப் ஆர்டிஸ்ட் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கின்றார். தமிழ்…