பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான பதற்றத்தைத் தணிக்க சீனாவில் நடைபெற்ற ஆறு நாள் அமைதிப் பேச்சுவார்த்தை எந்தவிதமான உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தது. இந்த மாநாட்டில் பாகிஸ்தான் தரப்பில் தஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் தஞ்சம் அளிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இதற்குப் பதிலடி கொடுத்த தலிபான் அரசு, பயங்கரவாதம் என்பது பாகிஸ்தானின் உள்நாட்டுப் பிரச்சினை என்று கூறியதோடு, பயங்கரவாதத்திற்கான தெளிவான விளக்கத்தை அளிக்குமாறு பாகிஸ்தானிடம் கேள்வி எழுப்பியது. ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர்நிறுத்தம் செய்ய முயற்சிப்பதாகக் கூறும் பாகிஸ்தானால், தனது அண்டை நாடான ஆப்கானிஸ்தானுடன் நிலையான அமைதியை ஏற்படுத்த முடியவில்லை என்பது இக்கூட்டத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த விவாதத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைக் கோடான ‘டியூரண்ட் கோட்டை’ அங்கீகரிக்க ஆப்கானிஸ்தான் மீண்டும் மறுப்பு தெரிவித்தது. தற்காலிக போர்நிறுத்தம் அமலில் இருந்தபோதிலும், பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் தாக்குதல் நடத்துவதாக தலிபான் பிரதிநிதிகள் குற்றம் சாட்டினர்.
மேலும் சீனா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் இந்த மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர அவநம்பிக்கை மற்றும் எல்லைப் பிரச்சனைகள் காரணமாக இந்த பேச்சுவார்த்தை ஒரு தீர்வைக் காணாமல் கலைந்தது. பாகிஸ்தான் முன்வைத்த நிபந்தனைகளை ஆப்கானிஸ்தான் நிராகரித்ததால், பிராந்தியத்தில் நிலவும் பதற்றம் தொடர்ந்து நீடிக்கிறது.
அரசியல் மேடைகளில் மொழிபெயர்ப்பு என்பது ஒரு கலை, ஆனால் அது சில நேரங்களில் விபத்தாக முடிந்துவிடுவதுண்டு. முன்னொரு காலத்தில் ராகுல்…
தமிழக அரசியலிலும் திரையுலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜய்யின் விவாகரத்து விவகாரம், தற்போது இறுதிக்கட்டத்தை…
சூரஜ் மற்றும் கோமல் ஆகிய இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, மகிழ்ச்சியாக இருந்த நிலையில், யாரோ ஒரு நபர் அனுப்பிய ஒரு…
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தலைநகர் சென்னை மக்களுக்காக 'சென்னை சூப்பர்-6' என்ற அதிரடி தேர்தல் வாக்குறுதிகளை திமுக…
இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'தாய்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், இன்னும் நான்கு நாட்களே மீதமிருப்பதால் அரசியல் கட்சிகள் அனல்…