அதிமுக கூட்டணியில் பாமக நேற்று இணைந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றடைந்தார். தொகுதி பங்கீடு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்காக இபிஎஸ் டெல்லி புறப்பட்டு சென்றார். திமுக அரசு மீதான ஊழல் புகார் பட்டியலை ஈபிஎஸ் அவரிடம் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தொகுதி பங்கீடு குறித்து பாஜக தலைவர்களுடன் இபிஎஸ் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயலையும் சந்திப்பதற்கு அவர் திட்டமிட்டு உள்ளார். முன்னதாக டெல்லி சென்ற பிறகு விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இபிஎஸ், அமித்சாவை சந்திக்க டெல்லி போறேன், தெளிவா முகத்தை காட்டிட்டு தான் வருவேன், போன தடவை மாதிரி போட்டு விட்டுறாதீங்க என்று கூறிவிட்டு சென்றார்.
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…
தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…