காதலிக்கும் போது மயக்குற மாதிரி பேசுவாங்க.. ஆனா கல்யாணத்துக்கு அப்புறம்..? Love Marriage பற்றி சரண்யா பளிச்..!!!

By Nanthini

Updated on:

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது பேவரட் அம்மாவாக வளம் வருபவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். இவர் 1987 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கிய நாயகன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். எட்டு வருடங்களாக ஹீரோயினியாக நடித்து வந்த இவர் 2003 ஆம் ஆண்டு முதல் அம்மா மற்றும் அண்ணி வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் கடந்த 1995 ஆம் ஆண்டு தன்னுடன் நடித்த பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

   

இந்த நிலையில் காதல் திருமணம் பற்றி சரண்யா பொன்வண்ணன் பேசியுள்ள ஒரு வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. அதாவது காதலிக்கும் போது அடிக்கடி வெளியில் கூட்டி செல்வது, நிறைய பொருட்கள் வாங்கி தருவது, இனிமையாக பேசுவது, நம்மைக் கவரும் வகையிலான பல வார்த்தைகளை பயன்படுத்துவது என ஆண்கள் இருப்பார்கள். ஆனால் திருமணத்திற்கு பிறகு இவள் என்னுடையவள் என அறிந்த ஆண்கள் அடுத்ததாக குழந்தை மற்றும் தொழில் என தன்னுடைய குடும்பத்தை கவனிப்பதில் தங்களது ஆர்வத்தை காட்டுவார்கள்.

இது போன்ற நேரங்களில் காதலிக்கும் போது எப்படி இருந்தார்களோ அது போன்று மனைவியிடம் இருக்கும் எண்ணம் வராது. இதன் பின்னால் குடும்பத்தை கவனிக்க வேண்டும் என்ற காரணம் மட்டுமே இருப்பதால் இதனை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் காதலிக்கும் போது இருந்த உலகம் வேறு திருமணத்திற்கு பிறகு இருக்கும் உலகம் வேறு. அதாவது ஒரு குறிப்பிட்ட வயதில் நாம் ஒவ்வொன்றுக்கும் ஆசைப்படுவோம். அதனைப் போல தான் இதுவும். வாழ்க்கைக்கு ஏற்றது போல ஒவ்வொரு சூழ்நிலையையும் புரிந்து வாழ்ந்தால் கணவன் மனைவிக்குள் எந்த சண்டையும் வராது. இப்படி புரிந்து கொண்டால் காதல் திருமணம் செய்து கொண்டவர்களும் எந்தவித சண்டையும் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ முடியும் என சரண்யா பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Kumudam இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@kumudamonline)

author avatar
Nanthini