‘சிறகடிக்க ஆசை’ சீரியல் ரோகிணிக்கு கல்யாணமாகி, குழந்தை கூட இருக்கா..? அழகிய குடும்ப புகைப்படம்…

By Begam

Published on:

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் ஆரம்பித்த நாளிலிருந்து விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருப்பதோடு இதில் நடித்து வருபவர்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் இருக்கின்றனர். குறிப்பாக முத்து , மீனா இவர்களின் நடிப்பிற்காகவே இந்த சீரியலை பார்ப்பவர்கள் ஏராளம்.

   

இந்த சீரியலில் வில்லி மாமியாருக்கு சப்போர்ட் பண்ணும் மூத்த மருமகளாக  ரோகினி கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை சல்மா அருணாகம். சென்னையைச் சேர்ந்த இவர் சென்னையில் தான் பிறந்து வளர்ந்தார். கல்லுாரிப் படிப்பை முடித்த பின்னர் மீடியா துறையில் சாதிக்க வேண்டும் என சேர்ந்ததோடு மாடர்லிங் துறையிலும் ஆர்வம் காட்டி வந்தார்.

 

இவர்  10ற்கு மேற்பட்ட விளம்பரங்களில் நடித்திருக்கின்றார். குறிப்பாக பூர்விகா மொபைல் விளம்பரத்தில் நடித்திருக்கின்றார். இது தவிர விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நம்ம வீட்டுப் பொண்ணு, ராஜா ராணி சீசன் 2, பாரதி கண்ணம்மா ஆகிய சீரியல்களிலும் ஜீ  தமிழில் ஒளிபரப்பாகிய ‘அமுதாவும் அன்னலக்ஷ்மியும்’ என்ற சீரியலிலும் நடித்துள்ளார்.

இவை அனைத்தையும் விட ‘சிறகடிக்க ஆசை’ சீரியல்  மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமாகி உள்ளார். நடிகை சல்மாவிற்கு திருமணமாகி குழந்தை இருப்பது நம்மில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. தற்பொழுது இவர் தனது மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர இதைப்பார்த்த ரசிகர்கள் ‘ உங்களுக்கு இவ்ளோ பெரிய மகனா? ‘ என ஆச்சரியமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.