நான் இது தான் அதிகமா சாப்பிடுவேன்.. விரோதமான உணவுப் பழக்கம் பற்றி மனம் திறந்த நடிகை சாய் பல்லவி..!;

By Nanthini

Updated on:

தமிழ், மலையாள மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய்பல்லவி. கடந்த 2015 ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பட்டித் தொட்டி எல்லாம் பிரபலமானார் சாய் பல்லவி. என்றும் பலர் அவரை மலர் டீச்சர் என்று தான் கூப்பிடுகிறார்கள். அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.

   

இவர் தமிழில் தியா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாகி தனுஷ் மற்றும் சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடிக்க தொடங்கினார். இவரரின் நடிப்பில் இறுதியாக வெளியான கார்கி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சமீப காலமாக ஆன்மீக பயணத்தில் ஈடுபட்டு வரும் சாய்பல்லவி பிரபல தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தன்னிடம் உள்ள ஒரு வினோதமான உணவுப் பழக்கத்தை பகிர்ந்து கொண்டார்.

அதாவது தான் அடிக்கடி விபூதி உண்ணும் பழக்கம் கொண்டுள்ளதாகவும் அதனால் தனது கை பையில் எப்போதும் எப்போது இருக்கும் என்றும் அதனை உண்பது தனக்கு மிகவும் பிடிக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் தான் ஒன்பது ஒரு விசேஷமான மரத்திலிருந்து செய்யப்பட்ட விபூதி எனவும் அவர் கூறியுள்ளார்

author avatar
Nanthini