தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கும் நடிகைகளில் ஒருவர் சாய் பல்லவி. 31 வயதாகும் நடிகை சாய்பல்லவி சொத்து மதிப்பு குறித்து நாம் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த இவர் ஜார்ஜியாவில் மருத்துவ பட்டம் பெற்றார்.
மருத்துவராக இருந்தாலும் சினிமா மீது இருந்த ஆர்வம் காரணமாக தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கினார், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியில் நடன போட்டியாளராக கலந்து கொண்ட இவர் கஸ்தூரிமான், தாம் தூம் போன்ற திரைப்படங்களில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு 2015 ஆம் ஆண்டு வெளிவந்த பிரேமம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டு கொடுத்தது. தமிழகத்தில் மட்டும் 200 நாட்களுக்கு மேல் ஓடி இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அந்தப் படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடித்திருப்பார். அந்த பெயரை சொல்லியே சில நாட்கள் ரசிகர்கள் அவரை அழைத்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தமிழில் அப்பாயி, மாரி 2, அதிரன், பாவ கதைகள், லவ் ஸ்டோரி, கார்க்கி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்து வழங்கும் அமரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது பாலிவுட் பக்கமும் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார் நடிகை சாய் பல்லவி. சமீபத்தில் தான் இவரது தங்கைக்கு நிச்சயம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.
படங்களில் தொடர்ந்து நடித்து வரும் சாய் பல்லவையின் சொத்து மதிப்பு 40 கோடி இருக்கும் என்று கூறப்படுகின்றது. ஒரு படத்தில் நடிப்பதற்கு இவர் 2 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். அது மட்டும் இல்லாமல் ஆடி க்யூ3 என்ற 53 லட்சம் மதிப்புள்ள காரை பயன்படுத்தி வருகிறார். இந்த கார்கள் இல்லாமல் மிர்ச்சி பி லான்சர் விவோ எக்ஸ், மாருதி சுசுகி நெக்ஸா உள்ளிட்ட கார்களையும் பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் டிவியில் தற்பொழுது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் நடுவர்களாக…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம் ஜி ஆர். நடிப்பு மட்டும் இல்லாமல்…
'புஷ்பா புருஷன்' என்கின்ற டயலாக் மூலமாக மக்களிடையே மிகவும் பிரபலமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி. சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்பு ஒரு…
தமிழ் சினிமாவில் கொஞ்சும் தமிழ் பேசி ரசிகர்களைக் கவர்ந்தவர் சரோஜா தேவி. கர்நாடகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அவரை தமிழ் ரசிகர்கள்…
தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும்…
வனிதா விஜயகுமார் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் என்ட்ரி கொடுத்தார் பிக் பாஸ் உள்ளிட்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு…