#image_title
சம்பள பாக்கியை கேட்டதால் தயாரிப்பாளர் தன்னை மிரட்டுவதாக தெலுங்கு நடிகை பாயல் ராஜ்புத் குற்றம் சாட்டி இருக்கின்றார். ஹிந்தி சினிமாவில் சின்னத்திரையில் நடித்து வந்த நடிகை பாயல் ராஜ்புத் தற்போது நடிகையாக இந்தி, தமிழ், தெலுங்கு, பஞ்சாபி உள்ளிட மொழிகளில் நடித்து வருகிறார். குறுகிய காலத்தில் பிரபல நடிகையாக மாறிவிட்டார்.
இந்தி திரையுலகில் அறிமுகமானாலும் ஆர் எக்ஸ் 100 என்கின்ற தெலுங்கு திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர் அஜய் பூபதியின் இயக்கத்தில் கடத்தி 2018 ஆம் ஆண்டு வெளியான அந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து அஜய் பூவுதியின் இயக்கத்தில் மங்களவாரம் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் நடிகை பாயல் ராஜ்புத் தான் சந்திக்கும் மிரட்டல் குறித்து சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கின்றார். நேற்று இரவு எஸ்பி ஸ்டேடியத்தில் நடந்த நிகழ்ச்சியில்நடிகை பாயல் ராஜ்புத்தின் ரக்ஷனா என்ற திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. இது நடந்து முடிந்த சில நிமிடங்களில் இந்த படத்தை வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார் நடிகை பாயல் ராஜ்புத்.
அவர் அதில் தெரிவித்திருந்ததாவது 5s என பெயரிடப்பட்ட இப்படம் 2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை படமாக்கப்பட்டது, படத்தின் ரிலீஸ் தாமதமாகி வந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் மங்களவாரம் வெற்றியை பணமாக்க முயற்சி செய்கிறார். தனக்கு சேர வேண்டிய பாக்கி தொகையை செட்டில் செய்யாமல் படத்தின் பிரமோஷனில் கலந்து கொள்ள என்னை வற்புறுத்தினார்.
நான் முடியாது என்று கூறிய காரணத்தினால் தெலுங்கு சினிமாவில் இருந்து உன்னை தடை செய்து விடுவோம் என மிரட்டி இருக்கிறார். மேலும் தன்னை தகாத வார்த்தைகளை பயன்படுத்தி அவர் இழிவாக பேசியிருந்தார். நிலுவைத் தொகையை செட்டில் செய்யாமல் இந்த படத்தை வெளியிட முடியாது அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்” என்று அவர் கூறியிருந்தார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மேலும் ரக்ஷனா திரைப்படத்தின் தயாரிப்பாளர்களுடன் எனது மேனேஜர் பேசும் போது டிஜிட்டல் ப்ரோமோஷனில் பாயலுக்கு தரவேண்டிய பணத்தை செட்டில் செய்தால் அவர் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று கூறப்பட்டது ஆனால் தயாரிப்பாளர் சமரசம் பேசுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் என்று குற்றம் சாட்டி இருக்கின்றார் நடிகை பாயல் ராஜ்புத்.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…