Connect with us

‘ராஜா ராணி’ படத்தில் வருவது போல மொத்தம் 18 கம்ப்ளைன்ட்.. தாய் பாசத்தில் அப்பார்ட்மெண்டையே அலறவிட்ட நயன்தாரா..!

CINEMA

‘ராஜா ராணி’ படத்தில் வருவது போல மொத்தம் 18 கம்ப்ளைன்ட்.. தாய் பாசத்தில் அப்பார்ட்மெண்டையே அலறவிட்ட நயன்தாரா..!

 

நடிகை நயன்தாரா தனது குழந்தைகளுக்காக செய்யும் அட்ராசிட்டியால் அப்பார்ட்மெண்டில் மொத்தம் 18 கம்ப்ளைன்ட் அவர் மீது ரிஜிஸ்டர் ஆகியுள்ளதாம். இதைக் கேட்ட ரசிகர்கள் சிரித்து வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. நடிகையாக மொத்தம் 20 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டார். இருப்பினும் தொடர்ந்து நடித்து வருகின்றார். பொதுவாக நடிகைகள் திருமணம் செய்து கொண்டால் நடிப்பதை நிறுத்தி விடுவார்கள். ஆனால் நடிகை நயன்தாரா திருமணம் முடிந்தும் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகிய பின்பும் அதே நம்பர் 1 இடத்தில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் பட்டத்துடன் ஜொலித்து வருகின்றார்.

   

இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் முடிந்து விட்டது. நேற்றைய தினம் தான் தங்களது திருமண தினத்தை ஹாங்காங்கில் குழந்தைகளுடன் கொண்டாடி இருந்தார்கள். தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்திளும் பிரபல நடிகையாக வலம் வருகிறார்.

அதிலும் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஜவான் திரைப்படத்தில் சிறப்பாக நடித்து பாலிவுட்டிலும் கலக்கி இருக்கின்றார் நடிகை நயன்தாரா. திரைப்படங்களில் மட்டும் இல்லாமல் குழந்தைகளையும் சிறப்பாக கவனித்து வரும் நடிகை நயன்தாரா வெளிநாட்டுகளுக்கு தன் குழந்தைகளை அழைத்துச் சென்று அங்கு குடும்பமாக சேர்ந்து சந்தோஷமாக இருந்து வருகின்றார்.

இப்படி சினிமா வாழ்க்கையிலும் குடும்ப வாழ்க்கையிலும் பிசியாக இருக்கும் நயன்தாரா அப்பார்ட்மெண்டில் செய்யும் கூத்துதான் தற்போது வைரலாகி வருகின்றது. தனது தாய்ப் பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக நடிகை நயன்தாரா சில விஷயங்களை செய்திருக்கின்றார். இவர் சென்னை எக்மோரில் உள்ள ஒரு பெரிய அப்பார்ட்மெண்டில் வசித்து வருகின்றார் நடிகை நயன்தாரா.

ஓய்வு நேரங்களில் தனது குழந்தைகளுடன் கீழே இறங்கி விளையாடும் போது ஏதாவது வாகனங்கள் வந்தால் உடனே திட்டி விடுகிறாராம். அப்படித்தான் ஒரு ஆட்டோக்காரன் ஸ்பீட் பிரேக்கரில் ஏறி இறங்கி கொண்டு வரும்போது அங்கு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள் போல உடனே நடிகை நயன்தாரா அவரிடம் ஏன் இப்படி வேகமாக வருங்க என்று கோபமாக பேசினாராம்.

அது மட்டும் இல்லாமல் உணவு டெலிவரி செய்வதற்கு ஒரு ஊழியர் வந்தபோது அந்த அப்பார்ட்மெண்டில் இருக்கும் சம்பந்தப்பட்ட நபருக்கு போன் செய்து டெலிவரி வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று சத்தமாக பேசியிருக்கின்றார். இதை கேட்ட நடிகை நயன்தாரா குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா ஏன் இப்படி கத்தி பேசுகிறீர்கள் மெதுவாக பேசுங்கள் என்று கூறியவுடன் அவர் தலை தெரிக்க ஓடி விட்டாராம். இப்படி நடிகை நயன்தாரா தனது தாய்ப்பாசத்தை அதிகமாக காட்ட அக்கம் பக்கத்தை சேர்ந்த அப்பார்ட்மெண்டில் இருக்கும் வீட்டுக்காரர்கள் என 18 பேர் அவர் மீது கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கிறார்கள். இது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது என பலரும் கூறி வருகிறார்கள்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top