ஷார்ட் கட்டிங் போட்டு அடையாள தெரியாமல் மாறிய ‘ஜெய் பீம்’ செங்கேணி.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..

By Begam

Published on:

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் நடிகை லிஜோமோல் ஜோஸ். இவர் கேரளா மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். பட்டப்படிப்பை முடித்துவிட்டு ஜெய் ஹிந்த் தொலைக்காட்சியில் பணியாற்றிய இவர் 2016 ல் வெளியான ‘மகேசிண்ட பிரதிகாரம்’ மலையாள திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.

   

இதைத்தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு வெளியான ‘கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். பிரபல முன்னணி நடிகரான மம்முட்டியுடன் ‘ஸ்ட்ரீட் லைட்ஸ்’படத்தில் நடித்துள்ளார். மேலும் பிரபல இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான ‘சிவப்பு மஞ்சள் பச்சை’  என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பிறகு நடிகர் சூர்யாவுடன் ‘தீதும் நன்றும்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து  நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ படத்தில் இவர் ஏற்று நடித்த செங்கேணி கதாபாத்திரம் இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி தந்துள்ளது. தற்பொழுது இவர் தமிழ் ,மலையாளம் என இரண்டு மொழிகளிலும் பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர், அவ்வப்பொழுது தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் தனது முடியை ஷார்ட் கட்டிங் செய்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள்  ‘ஜெய் பீம்’ பட செங்கேணியா இது ..? என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.