தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக திகழும் சூப்பர் ஸ்டார் மோகன் பாபுவின் மகள் தான் லட்சுமி மஞ்சு. இவர் தமிழில் ராதா மோகன் இயக்கிய மொழி மற்றும் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான கடல் ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் சமூக சேவைகளிலும் அதிக ஆர்வம் கொண்டவர். இவர் ஏற்கனவே தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன் மூலமாக பல உதவிகளை செய்து வருகின்றார்.
இந்நிலையில் தற்போது 167 பள்ளிகளை நடிகை லட்சுமி மஞ்சு தத்தெடுத்துள்ளார். இவர் 167 பள்ளிகளை தத்து எடுத்ததன் மூலமாக 16,497 மாணவர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடிகை லட்சுமி மஞ்சு கூறுகையில், புதுமையான கற்பித்தல் முறைகள் மூலமாக மாணவர்களின் மேம்படுத்தும் நோக்கத்தில் இதனை செய்துள்ளேன்.
தத்தெடுத்த பள்ளிகளில் 50 மாணவர்களை கொண்ட ஸ்மார்ட் வகுப்புகள் உருவாக்கப்படும் என்றும் தேர்வுகள் நடத்தி அதன் மூலமாக மாணவர்களின் வாழ்க்கையில் மாற்றம் உண்டாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தெலுங்கு மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள சுமார் 167 பள்ளிகளை இவர் தத்தெடுத்துள்ளார். இவரின் இந்த செயலுக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
தெலுங்கு சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘அந்தாரி பந்துவையா’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பிரியங்கா…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…
நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…
தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…
தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…