நீ பார்க்க பார்க்க காதல் கூடுதே … 29 வருஷம் ஆகிடுச்சு… ப்ரொபோஸல் தினத்தை முன்னிட்டு கணவர் சுந்தர் சி யை நினைத்து உருகும் குஷ்பூ…

By Begam

Published on:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை குஷ்பூ. இவர் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். ரஜினி ,கமல், விஜயகாந்த் ,சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை குஷ்பு.

   

இவர் தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார். திரையுலகின் உச்சத்தில் இருக்கும் பொழுது இயக்குனர் சுந்தர்சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  இவருக்கு தற்பொழுது அவந்திகா , அனந்தித்தா என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.

ஒரு கட்டத்தில் குண்டாக இருந்த குஷ்பூவும் அவரது மகள்களும் தங்களது உடல் எடையை வெகுவாக குறைத்து அந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்ய புகைப்படங்கள் படுவைரலானது. இவர் நடிகையாக மட்டும் இன்றி தற்பொழுது பாஜக கட்சியில் முக்கிய பொறுப்பிலும் உள்ளார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் குஷ்பூ. பிப்ரவரி 22 ஆம் தேதியான இன்று உலக ப்ரோபோசல் தினம் கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு அவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், ‘ அன்றிலிருந்து, 22 பிப்ரவரி 1995 முதல், இப்போது, ​​22 பிப்ரவரி 2024 வரை, எதுவும் மாறவில்லை. ஒருவருக்கொருவர் அன்பு, மரியாதை செலுத்தவும்,  நமது குறைகளை ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்வது, . ஒருவரையொருவர் கையைப் பிடித்துக் கொண்டு, இன்று நம்மிடம் இருப்பதைக் கொண்டு செல்கிறோம்.  29 வருடங்கள் ஆகிவிட்டது.  சில நேரங்களில் சிறந்த முடிவுகள் எடுக்கப்படும். என் வாழ்க்கையின் சிறந்த முடிவு நீங்கள் தான்.’ என்று குறிப்பிட்டு தனது கணவர் சுந்தர் சி அவர்களை குறிப்பிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு…

 

View this post on Instagram

 

A post shared by Kushboo Sundar (@khushsundar)