தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் தான் ஜோதிமயி. இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாள திரை உலகிலும் மிக பிஸியான நடிகையாக தான் இருந்தார். இவர் குறைந்த திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர். மலையாளத்தில் இஷ்டம் என்ற திரைப்படம் மூலமாக தான் இவர் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். பிறகு தமிழ் சினிமாவில் நுழைந்த இவ்வாறு சுந்தர் சி இயக்கத்தில் தலைநகரம் திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
கேரளாவை சேர்ந்த இவர் தமிழில் இதய திருடன் போன்ற திரைப்படங்களில் சிறப்பு தோற்றங்களில் நடித்தது மட்டுமல்லாமல் பெரியார், நான் அவன் இல்லை, அறை எண் 350 மற்றும் சபரி போன்ற பல்வேறு திரைப்படங்களில் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தினார். இவருடைய அழகு மற்றும் திறமையான நடிப்புக்காக ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டுக்கள் கிடைத்தன. தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து படங்களில் சிறப்பாக நடித்த இவர் முன்னணி நடிகையாகவும் திகழ்ந்தார். அதன் பிறகு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் இவர் ஆள் அடையாளம் தெரியாமல் காணாமல் போனார்.
தற்போது 41 வயதாகும் இவர் தலைமுடி முழுவதும் நரைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார். இவரைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இவருக்கு என்ன ஆனது என்று இணையத்தில் புகைப்படத்தை வெளியிட்டு கேள்வி கேட்டு வருகிறார்கள். சினிமாவில் உச்சத்தில் இருந்த நடிகை தற்போது நிலைமை மாறி இப்படி இருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதேசமயம் இவருடைய ஆரோக்கியம் குறித்து கவலைப்படும் ரசிகர்கள் இந்த நிலைமை இவருக்கு எப்படி வந்தது என்று பரிதாபத்துடனும் கேட்டு வருகிறார்கள்.
சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது எழுப்பப்பட்ட முக்கியக் கேள்விக்கு, இன்னும் இரண்டு…
தொகுதி மறுசீரமைப்பு மற்றும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' ஆகிய இரு முக்கிய மசோதாக்களையும் மீண்டும் கொண்டு வர பாரதிய…
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக "சிங்கப்பெண் அதிரடிப்படை" என்ற புதிய திட்டம் வரும் வாரத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் விஜய்…
விஐபி (VIP) கலாச்சாரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்களின் வருகைக்காகச் சாலைகள் முடக்கப்படுவதும், அதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள்…
டெல்லியில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படவிருந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை, வெறும் 48 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு இன்று…
பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…