மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்திய அளவில் இரும்பு மனுஷி என்று பல அரசியல் தலைவர்களால் போற்றப்பட்டவர். அரசியல் என்பதையும் தாண்டி அவருடைய இளமை காலங்களை திரும்பிப் பார்த்தால் ஜெயலலிதா ஒரு சிறந்த நடிகை என்று தான் சொல்ல வேண்டும். தன்னுடைய 15 வது வயதிலேயே சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்து விட்டார். ஜெயலலிதா அரசியலுக்குள் வந்தது எப்படி என்றால் தனக்கு விருப்பமில்லாமல் நடந்த ஒன்று என்றுதான் சொல்வார். அதனைப் போலத்தான் அவர் சினிமாவுக்குள் வந்ததும். நன்றாக படிக்கக்கூடிய மாணவி படிப்பை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்த நேரத்தில் அவருடைய தாய் நடிகை சந்தியாவின் வற்புறுத்தலால் சினிமாவுக்குள் வந்தவர் தான் ஜெயலலிதா.
மிகவும் சிறு வயதிலேயே சினிமாவுக்கு வந்ததால் பெரும்பாலும் அவருடன் ஜோடி சேர்ந்த அத்தனை நடிகர்களும் அவரை விட வயதில் மூத்தவர்களாக தான் இருந்தனர். இதனிடையே ஜெயலலிதா எம்ஜிஆரை தவிர ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், சிவாஜி கணேசன் ஆகியோரோடு நடித்துள்ளார். ஜெய்சங்கர் ரவிச்சந்திரனோடு நெருக்கமாக இருந்ததாக சொல்லப்படுவதுண்டு. ஜெயலலிதா ரவிச்சந்திரனோடு குமரிப்பெண் மற்றும் நான் போன்ற திரைப்படங்களில் நடித்த போது அவருக்கு ரவிச்சந்திரன் மீது காதல் வந்ததாகவும் அவரையே திருமணம் செய்து கொள்ள விரும்பியதாகவும் சொல்லப்படுகிறது. அதற்கு காரணம் ரவிச்சந்திரன் ஸ்ரீரங்கம் ஐயங்கார் குடும்பத்தை சேர்ந்தவர். மேலும் மூன்று தலைமுறைகளுக்கு முன்பே அவர்களது குடும்பத்திற்கு தொடர்பு இருந்து வந்ததாம்.
ரவிச்சந்திரனுக்கு ஜெயலலிதா மீது ஆசை இருந்தாலும் அவர் எம்ஜிஆரின் செல்வாக்குக்கு பயந்தார். கல்கண்டு பத்திரிக்கையில் ரவிச்சந்திரன் பற்றி தமிழ்வாணன் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அதில் சின்ன எம்ஜிஆர் உண்மையிலேயே சண்டை போடுகிறார் என குறிப்பிட்டு இருந்தார். அதில் சின்ன எம்ஜிஆர் உண்மையிலேயே சண்டை போடுகிறார் என குறிப்பிட்டு இருந்தார். அவர் ஒரு தமிழ் நடிகரை உயர்த்தி விட அவ்வாறு எழுதி இருந்தாலும் அது ஜெயலலிதாவின் தூண்டுதலின் பெயரில் எழுதப்பட்டதாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவிற்கு எம்ஜிஆர் மீது இருந்த கோபமும் அவரை பழிவாங்கவே இப்படி செய்தார் எனவும் சொல்லப்படுகிறது. இந்த தகவல்களை வலம்புரி ஜான் ஒரு புத்தகத்தில் எழுதியுள்ளார்.
தமிழக அரசியலில் நடிகர் விஜயன் 'தமிழக வெற்றிக் கழகம்' ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்தும், அவர் மீதான விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை…
மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில், தன்னைத் திருமணம் செய்ய மறுத்த பெண்ணின் 11 வயது மகனை ஆத்திரத்தில் ஒரு நபர்…
மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் உதவியாளர் வீட்டில் சுமார் ₹9 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம், தமிழக அரசியல்…
கரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி வெளியிட்ட அறிக்கை பெரும்…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பரப்புரை நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், மதுரை மத்திய தொகுதியின் களம் உணர்ச்சிப்பூர்வமான திருப்பங்களைக் கண்டுள்ளது.…