தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை லட்சுமி. இவர் கடந்த 1985 ஆம் ஆண்டு வெளியான சம்சாரம் அது மின்சாரம் என்ற திரைப்படத்தில் அடக்கமான மருமகளாக நடித்து புகழ்பெற்றவர். இந்த திரைப்படத்திற்கு முன்பு பல நூறு படங்கள் லட்சுமி நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் இதுவரை 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதேசமயம் பிலிம்பேர் விருதுகள், கர்நாடக அரசு விருதுகள், கேரளா அரசு விருது மற்றும் தெலுங்கு சினிமாவின் நந்தி விருது என எண்ணற்ற விருதுகளை பெற்றுள்ளார். இவர் கேரளாவை சேர்ந்த இன்சூரன்ஸ் கம்பெனியை சேர்ந்த பாஸ்கரன் என்பவரை 1969ல் திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளார். அவரும் ஒரு நடிகை தான்.
தெலுங்கு சினிமாவில் முதன் முதலில் அறிமுகமான இவர் தமிழில் நடிகர் சிவகுமார் நடிப்பில் வெளியான ‘நியாயங்கள் ஜெயிக்கட்டும்’ படத்தின் மூலம் கால் பதித்தார். சூர்யா நடிப்பில் வெளியான ஆறு திரைப்படத்தில் ரவுடி பொம்பளை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் தான் ஐஸ்வர்யா பாஸ்கரன். தற்பொழுதும் இவர் வெள்ளித்திரை, சின்னத்திரை என பிசியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஐஸ்வர்யா அளித்த பேட்டி ஒன்றில், நடிகர் பிரபு மீதான காதல் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியதாவது, ’16 வயதில் இருந்தே பிரபுவை தான் காதலிக்கிறேன். இன்னமும் அவர் எனக்கு டார்லிங் தான். இந்த விஷயம் அவரது மனைவி புனிதா அக்காவுக்கே தெரியும். நடிகர் பிரபுவின் சின்ன வீடா கூட போக ரெடியென்றே அவரிடம் சொல்லியிருக்கேன். அவர் அந்த காலத்துல அப்படியொரு அழகா இருப்பாரு.’ என்று மனம் திறந்து கூறியுள்ளார்.