‘என்னய்யா பண்ற என்ன வைச்சு நீ…?’ ஏ.ஆர் முருகதாஸை வெளுத்து வாங்கிய விஜயகாந்த்… ரமணா படப்பிடிப்பில் நடந்த சுவாரசிய சம்பவம்…

By Begam

Published on:

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் படங்களை இயக்கியுள்ள இவர் முதன்முறையாக அஜித் நடிப்பில் வெளிவந்த தீனா படத்தின் மூலம் சினிமாவில் எண்ட்ரீ கொடுத்தார்.

   

நடிகர் அஜித்திற்கு தல என்ற பெயர் வர காரணமாகவும் இருந்தவர். இதுவரை தமிழில் இவர் எடுத்த அனைத்து படங்களுமே ஹிட் என்றே கூறலாம். அதனை தொடர்ந்து விஜயகாந்த்தை வைத்து  ரமணா, சூர்யா உடன் கஜினி, விஜய் உடன் துப்பாக்கி, சூர்யா ஏழாம் அறிவு, கத்தி, சர்கார் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார். இயக்குனராக மட்டும் இல்லாமல் எழுத்தாளர், நடிகர், தயாரிப்பாளராகவும் சினிமாவில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் அவர்கள் நடிகர் விஜயகாந்தை வைத்து ரமணா படத்தை இயக்கும் பொழுது ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரசியமான சம்பவம் ஒன்று தற்பொழுது இணையத்தில் வெளியாகி  வைரலாகி வருகிறது. அதாவது, ‘ரமணா படத்தின் படப்பிடிப்பு மொத்தம் 96 நாட்கள் நடைபெற்ற நிலையில், விஜயகாந்தை வைத்து வெறும் 45 நாட்கள் மட்டுமே ஏ.ஆர். முருகதாஸ் ஷூட்டிங் செய்தாராம்.

அதிலும், காலை 8 மணிக்கு படப்பிடிப்பு என்றால் மதியம் 1 மணியுடன் ஷூட்டிங் முடிந்தது என விஜயகாந்தை அவர் அனுப்பி விடுவாராம். அதே போல நைட் ஷூட்டிங்கின் போது 7 மணிக்கு ஆரம்பித்தால் 10 மணிக்கெல்லாம் அவரின் ஷூட்டிங்கை முடித்து விடுவாராம். இப்படி ஒருநாள் ஏ.ஆர். முருகதாஸ் விஜயகாந்தை பேக்கப் செய்ய கடுப்பான அவர் ‘என்னய்யா பண்ற என்ன வைச்சு நீ…?’ என முருகதாஸை வெளுத்து வாங்கியுள்ளார். ஆனால், படத்தை முழுவதுமாக பார்த்த பின் தான் அவருக்கு எல்லாமே புரிந்ததாம். பிறகு இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸை கூப்பிட்டு பாராட்டு மழை பொழிந்தாராம் விஜயகாந்த்.