மாவீரன் படத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?….அடடே இவ்வளவு வா…

By Samrin

Published on:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் ராஜபாளையத்தை பூர்விகமாக கொண்டவர். இவர் தொடக்க கல்வியை ராஜபாளையத்தில் படித்தார். குடும்பத்துடன்  சென்னையில் வந்தனர். கோடம்பாக்கத்தில் உள்ள எம்ஜிஆர் மேல்நிலைப் பள்ளியிலும் லிட்டில் ஏஞ்சல்ஸ்லிட்டில் ஏஞ்சல்ஸ் மேட்டிலும் பள்ளி படிப்பை படித்தார்.

   

அதன் பிறகு தன்ராஜ் பெய்ட் ஜெயின் கல்லூரியில்  Commerce இளங்கலை பட்டம் பெற்றார்.படித்து முடித்த பிறகு மொத்த விற்பனை சிமென்ட் வணிகத்தில் கணக்கு உதவியாளராக பணியாற்றினார். அதன் பிறகு துபாய்க்கு  சென்று கணக்காளராக பணியாற்றினார்.அந்த வேலையை விட்டுவிட்டு இந்தியா திருப்பினார்.

பிறகு  கூத்து பட்டறையில் கணக்காளராகவும்  நடிகராகவும் சேர்ந்தார்.  அதன் பின்னர் பின்னணி நடிகராக தனது  திரை பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு ‘புதுப்பேட்டை’ என்ற  படத்தில் நடிகர் தனுஷிற்கு தோழனாக நடித்திருந்தார். அதன் பிறகு இவர் தமிழில் ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெறவில்லை.  2012 ஆம் ஆண்டு வெளியான ‘சேதுபதி’ திரைப்படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.

இவர் தமிழில் பஞ்சு மிட்டாய்,  அவளும் நானும்,  சுந்தர பாண்டியன், பண்ணையாரும் பத்மினியும்,  ரம்மி,  ஆண்டவன் கட்டளை,  புரியாத புதிர்,  பன்னீர்செல்வம் போன்ற பல படங்களில்  நடித்துள்ளார். இயக்குனர் வெற்றிமாறன்  இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘விடுதலை’ திரைப்படத்தில் நடித்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதி ஜெஸ்ஸி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

இயக்குனர்  மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்-அதிதி ஷங்கர் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் மாவீரன். இன்று படு சூப்பராக உலகம் முழுவதும் படம் வெளியாகி இருக்கிறது.  நடிகர் விஜய் சேதுபதி  இப்படத்திற்கு டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக பணியாற்றியுள்ளார் . இப்படத்திற்கு டப்பிங் செய்த்தற்கு பணம் வாங்க வில்லையாம். ஏன் என்றால்  இயக்குனர் மடோன் அஸ்வின் இவர் நண்பர்.