நள்ளிரவு 1 மணிக்கு மகளை சந்தித்த நடிகர் விஜய் ஆண்டனி…! 3 மணிக்கு தூக்கில் தொங்கியது ஏன்…?

By Begam

Updated on:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி.  நடிகராகவும் இசையமைப்பாளராகவும் திரையுலகில் பிசியாக வலம் வந்த நடிகர் விஜய் ஆண்டனியின் வாழ்க்கையில் நேற்று ஒரு பெரிய புயல் வீசியது. இவரது மூத்த மகளான மீரா நேற்று அதிகாலை 3 மணிக்கு தற்கொலை செய்து கொண்டார்.

   

17 வயதான மீரா பிளஸ் டூ படித்து வரும் நிலையில் விஜய் ஆண்டனி தனது குடும்பத்துடன் டிடிகே சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றார்.  நேற்று அதிகாலை 1 மணி வரை விஜய் ஆண்டனி தனது அலுவலக வேலைகளை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்பொழுது அவர் மீராவை பார்த்த போது பதட்டத்துடன் காணப்பட்டாராம்.

இதைத்தொடர்ந்து தான் அவர் 3 மணி அளவில் அவர் தனது அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த ஒரு வருடமாக அவர் மனஅழுத்தத்திற்க்காக சிகிச்சை பெற்றுக் கொண்டு வந்திருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் திரையுலகிற்க்கே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

author avatar