கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் நடிகர் விதார்த், அமலாபால், தம்பி ராமையா மற்றும் பாஸ்கர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மைனா. தீபாவளி அன்று வெளியான இந்த திரைப்படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்ததுடன் 58 வது தென்னிந்திய ஃபிலிம் பேர் விருதில் சிறந்த திரைப்படத்திற்கான விருதும் வழங்கப்பட்டது. இந்த திரைப்படத்தின் தன்னுடைய அற்புதமான நடிப்பை நடிகர் விதார்த் வெளிப்படுத்தியிருந்தார்.
இந்தத் திரைப்படம் இவருடைய சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது என்று கூறலாம். 2001 முதல் சிறு வேடங்களில் நடித்து வந்த இவர் திருவண்ணாமலை திரைப்படத்தின் மூலமாக வில்லன் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து இவர் கதாநாயகனாக மைனா திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார். மேலும் இவர் மௌனம் பேசியதே, சண்டக்கோழி, கொக்கி, திருப்பதி, ராமன் தேடிய சீதை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் மைனா திரைப்படம் குறித்து நடிகர் விதார்த் மனம் திறந்து பேசியுள்ளார். அதாவது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியைத் தந்த மைனா திரைப்படத்தில் நடிகர் விதார்த் தான் பெற்ற சம்பளம் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார். மைனா படத்தை ஒரு வருடம் எடுத்தார்கள், நான் 65 நாட்கள் மட்டுமே நடித்தேன், ஆனால் எனக்கு ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே சம்பளம் கொடுத்தார்கள் என்று தெரிவித்துள்ளார். இவ்வளவு பெரிய வெற்றி படத்தில் நடித்த ஒரு நடிகருக்கு இவ்வளவு குறைந்த சம்பளம் கொடுக்கப்பட்டிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் ஒரு மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. பாரம்பரியமிக்க திமுக, அதிமுக ஆகிய இருபெரும்…
தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ள நிலையில், தவெக சட்டமன்ற உறுப்பினர்களை (எம்.எல்.ஏக்கள்) விலைக்கு…
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ‘ஜனநாயகன்’ திரைப்படத் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா நியமனம் செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும்…
தமிழ்நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெறாவிட்டாலும், தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்து நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மாநில அரசியல் களம் தினமும் ஒரு பரபரப்புடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு முன்பு…
கரூர் மரணங்கள் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தை நாட திமுக தலைமை…