Categories: CINEMA

பெத்த மகனை 6 கோடி ரூபாய்க்கு நம்பாத நடிகர் சிவக்குமார் – பருத்திவீரன் பஞ்சாயத்துக்கு காரணமே அதுதான்

பருத்திவீரன் படம் தயாரிப்பு குறித்த பிரச்னை, கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. சமீபத்தில் இதுகுறித்து ஞானவேல்ராஜா, இயக்குநர் அமீரை தரக்குறைவாக விமர்சித்து பேசியது, வைரலாகி சோஷியல் மீடியாவில் அனல் பறந்தது. இதுகுறித்து சினிமா விமர்சகர் செய்யாறு பாலு, சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, மகன் கார்த்தி நடிக்க ஆசைப்படுகிறார். ஆனால், தனது சொந்த பணத்தை போட்டு, மகன் கார்த்தியை நம்பி படம் தயாரிக்க நடிகர் சிவக்குமார் விரும்பவில்லை. அதனால்தான், ஞானவேல் ராஜாவை கூப்பிட்டு தயாரிக்க சொல்கிறார். சூர்யா தம்பின்னு பிரமோட் பண்ணிக்க, நடிகர் சிவக்குமார் பையன்னு விளம்பரம் செஞ்சுக்க என்று ஐடியா கொடுத்து, இயக்குநர் அமீரை அவருடன் கோர்த்து விட்டுள்ளார். இதுதான் நடந்துள்ளது.

பருத்திவீரன் படத்துக்கான பட்ஜெட் தீர்மானித்தது 2.75 கோடி ரூபாய். ஆனால், 6 கோடி ரூபாய் ஆகிவிட்டது. அந்த காலகட்டத்தில் அஜீத், விஜய் போன்ற பெரிய நடிகர்களின் பட்ஜெட்டே 6 கோடி ரூபாய்தான். புதுமுக நடிகர் கார்த்திக்கு அதிகபட்ச பட்ஜெட் ஒரு கோடி ரூபாய்தான். ஆனால் படத்தை சிவக்குமார், சூர்யா பேமிலி பார்த்த போது, படம் வேற லெவலில் இருந்தது புரிந்தது. ஆனால், அவர்களுக்கு அமீர் கேட்ட பணத்தை தர விருப்பமில்லை. அதனால் பிரச்னை புரடியூசர் கவுன்சில் வரை சென்றது. அப்போது இருந்த நிர்வாகிகள் ராமநாராயணன், சிவசக்தி பாண்டியன் போன்றவர்கள் இதற்கென 5 பேர் கொண்ட குழுவை அமைத்து, படத்தை பார்த்து எவ்வளவு செலவு என கணக்கெடுக்குமாறு கூறியுள்ளனர்.

ஒரு படம் எடுக்க திரைக்கு வெளியே ஆகிற செலவை திரையில் காட்ட முடியாது. சினிமாவில் காட்டப்படும் காட்சிகளுக்கு பின்னால் எத்தனையோ செலவுகள் இருக்கின்றன. அதைக்கூட புரிந்துக்கொள்ளாமல் இப்படி செய்திருப்பதை கேள்விபட்டு, சில தயாரிப்பாளர்கள் விழுந்து விழுந்து சிரித்திருக்கின்றனர். பருத்தி வீரன் படம்தான் கார்த்தியை ஒரு நடிகராக உருவாக்கியது. ஒரு சென்னை பையனை, அமெரிக்காவில் படித்தவரை ஒரு தேனி, கம்பம், மதுரை மாவட்ட சண்டியராக திரையில் மாற்றிக் காட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல. அதை செய்து காட்டியவர் இயக்குநர் அமீர்.

அப்படிப்பட்ட ஒரு சிறந்த படைப்பாளியை ஞானவேல் ராஜா பேசியது மிகப்பெரிய தவறு என்பதால்தான் சசிக்குமார், பாரதிராஜா, கரு பழனியப்பன், சமுத்திரக்கனி போன்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பெத்த மகன் கார்த்தியை நம்பி, பணம் முதலீடு செய்ய அப்பா சிவக்குமார் அப்போது முன்வரவில்லை. அப்படி வந்திருந்தால், இந்த பஞ்சாயத்துக்கு வந்திருக்க வாய்ப்பில்லை. 6 கோடி ரூபாய்க்கு அவர் மகனை நம்பி இருந்தால், இது இவ்வளவு தூரம் பிரச்னையாக வந்திருக்காது, இதை ஒரு தயாரிப்பாளரே என்னிடம் சொன்னார்  என்று கூறியிருக்கிறார் செய்யாறு பாலு.

Sumathi
Sumathi

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

6 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

6 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

7 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

7 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

8 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

8 மணி நேரங்கள் ago