“அன்பான மனைவி அமைந்தால் பேரின்பமே” சிவகார்த்திகேயனின் பலரும் பார்த்திடாத அழகிய குடும்ப புகைப்படங்கள்….

By Samrin

Published on:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில்  ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் பிப்ரவரி 17ஆம் தேதி 1985 ஆம் ஆண்டு பிறந்தார். சிவகங்கை மாவட்டத்தை பூர்வமாக கொண்டவர்.

   

இவர் தந்தை தாஸ் தாய்  ராஜி தாஸ். இவர்கேம்பியன் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார்.

அதன் பிறகு ஜே ஜே பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில்  பிஇ பட்டம் பெற்றார்.  இவர் கல்லூரி காலத்திலேயே பல்வேறு கலாச்சார நிகழ்ச்சில் மிமிக்ரி மற்றும் ஸ்டாண்ட்-அப் காமெடி செய்தார்.

விஜய்  டிவியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’சீசன் 3  நிகழ்ச்சியில் பங்கு பெற்று அந்த நிகழ்ச்சியில் வெற்றியும்  பெற்றார்.

அவரது நண்பர் இயக்கிய  முகப்பு புத்தகம் ,அடையாளம் , குறள் 786 மற்றும் 360° உள்ளிட்ட குறும்படங்களில் நடித்தார்.

அதன் பிறகு இயக்குனர் பாண்டியராஜ்  இயக்கத்தில் வெளியான ‘மெரினா’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்தில் நடித்தார். அதை தொடர்ந்து ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் வெளியான 3 திரைப்படத்தில்  ஒரு முக்கிய கதாபாத்தில் நடித்தார் .

2013 ஆம் ஆண்டு வெளியான ‘எதிர்நீச்சல்’ படத்தின்  மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.இதன் பிறகு இவர் ஏராளமான வெற்றி படங்களில் நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார் .

இவர் தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் ,காக்கி சட்டை, ரஜினி முருகன், ரெமோ, வேலைக்காரன், கனா ,போன்ற பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

இவர் தற்போது மாவீரன் அயலான் எஸ் கே 21 போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் கனா நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, டாக்டர், தாதா  போன்ற படங்களில் தயாரிப்பாளர்.

இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்ரீதர்’ என்ற படத்திற்கு சித்தார்த்துக்கு டப்பிங் செய்துள்ளார். இவர் ஜோடி நம்பர் சீசன் 5 ,ஜோடி நம்பர் ஒன் ஜூனியர்,

ஐந்தாம் ஆண்டு விஜய் விருதுகள் ,கிங்ஸ் ஆப் காமெடி ,6 ஆண்டு விஜய் விருதுகள் போன்ற தொலைக்காட்சி  நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே ,காக்கி சட்டை, மாப்பிள்ளை ,ரஜினி முருகன் ,லிப்ட் போன்ற படங்களில் பின்னணி பாடகராக பாடியுள்ளார்.

இவர் கோலமாவு கோகிலா ,கூர்க்கா, டாக்டர், மிருகம், தாதா, போன்ற படங்களில் பாடலாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் ,பிங்க்வில்லா ஸ்டைல் ஐகான்கள் விருது, எடிஷன் விருது, விஜய் தொலைக்காட்சி விருது, தமிழ் மாநில திரைப்பட விருது, என பல விருதுகளை பெற்றுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் ஆர்த்தி என்பவரை 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஆராதனா என்ற மகளும் குகன் தாஸ் என்ற ஒரு மகனும்  உள்ளனர். தற்போது இவரின் குடும்ப புகைபடமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது .