தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பலத்த காற்று மற்றும் தொடர் கனமழை காரணமாக சென்னையில் வசித்து வந்த மக்கள் பலரும் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். அதே சமயம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி உள்ளனர். இதில் முதல் கட்டமாக நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினர். அடுத்ததாக சாந்தனு, kpy பாலா மற்றும் அறந்தாங்கி நிஷா என அடுத்தடுத்து பிரபலங்கள் பலரும் மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.
அதனைப் போலவே நேற்று விஜய் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் களத்தில் இறங்கியுள்ளனர். இப்படி பிரபலங்கள் பலரும் வெள்ளத்தில் சிக்கி உள்ள மக்களுக்கு உதவ முன்வந்துள்ள நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருந்தபோது ஆர் ஜே பாலாஜி மற்றும் சித்தார்த் மிகப்பெரிய உதவியை செய்தனர். சமூக வலைத்தளத்தில் மக்களுக்காக குரல் கொடுத்து அதன் பிறகு களத்தில் இயங்கி நிவாரண பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் 2015 ஆம் ஆண்டை விட தற்போது அதிக அளவு வெள்ள அபாயத்தையும் கனமழையால் மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து இதுவரை கண்டிராத பெரும் அவதிகளை மக்கள் சந்தித்து வரும் நிலையிலும் அன்றைய போராளிகள் இதுவரை நிவாரண நடவடிக்கையில் இறங்காமல் உள்ளனர். இருந்தாலும் சித்தார்த்த தற்போது மும்பையில் இருப்பதால் மக்களுக்கு உதவ முடியாத நிலையில் உள்ளார்.
அதுமட்டுமல்லாமல் 2015 ஆம் ஆண்டு குறிப்பிட்ட பகுதி மட்டுமே வெள்ளத்தில் சிக்கி இருந்த நிலையில் மற்ற பகுதிகளில் இருந்து பிரபலங்கள் பலரும் களத்தில் இறங்கினர். ஆனால் தற்போது மொத்த இடத்தையும் புயல் சூறையாடு உள்ள நிலையில் அனைவருமே பாதிப்பில் உள்ளதால் தங்களை காப்பாற்றிக் கொள்ளும் வழியில் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…
நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…
நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…
பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…
80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…