#image_title
உலக நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் கமலஹாசன். இவர் தற்போது திரைப்படங்களிலும், தன்னுடைய மக்கள் நீதி மய்யம் கட்சியிலும் படு பிசியாக செயல்பட்டு கொண்டிருக்கிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் நடித்து, தயாரித்த ‘விக்ரம்’ திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. 150 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம், சுமார் 500 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்தது.
இந்த படத்தின் உற்சாகத்தால் மீண்டும் அடுத்த அடுத்த படங்களில் நடிக்க துவங்கி உள்ளதோடு மட்டுமின்றி, திரைப்பட தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது சிம்புவை வைத்து ஒரு படத்தையும், சிவகார்த்திகேயனை வைத்து மற்றொரு படத்தையும் கமலஹாசன் தயாரித்து வருகிறார்.
அதேபோல் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடித்து வந்த ‘இந்தியன் 2’ திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு துவங்கப்பட்டாலும், ஒரு சில காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு பாதியில் நின்றது. பின்னர் மீண்டும் அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வரவே, முழு வீச்சில் இப்படத்தின் படப்பிடிப்பை துவங்கிய இயக்குனர் ஷங்கர் இறுதி கட்ட படப்பிடிப்பை முடித்து ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து தக் லைஃப் ஷூட்டிங் ஆரம்பித்துள்ளது. இதுமட்டுமின்றி இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப்பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடிக்கும் ‘கல்கி ‘படத்தில் கமலும் இணைந்துள்ளார்.தற்பொழுது இத்திரைப்படத்திற்காக அவர் வாங்கிய சம்பளம் தான் இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. அதற்காக அவர் 20 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…