உலக நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் கமலஹாசன். இவர் தற்போது திரைப்படங்களிலும், தன்னுடைய மக்கள் நீதி மய்யம் கட்சியிலும் படு பிசியாக செயல்பட்டு கொண்டிருக்கிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் நடித்து, தயாரித்த ‘விக்ரம்’ திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. 150 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம், சுமார் 500 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்தது.
இந்த படத்தின் உற்சாகத்தால் மீண்டும் அடுத்த அடுத்த படங்களில் நடிக்க துவங்கி உள்ளதோடு மட்டுமின்றி, திரைப்பட தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது சிம்புவை வைத்து ஒரு படத்தையும், சிவகார்த்திகேயனை வைத்து மற்றொரு படத்தையும் கமலஹாசன் தயாரித்து வருகிறார்.
அதேபோல் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடித்து வந்த ‘இந்தியன் 2’ திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு துவங்கப்பட்டாலும், ஒரு சில காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு பாதியில் நின்றது. பின்னர் மீண்டும் அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வரவே, முழு வீச்சில் இப்படத்தின் படப்பிடிப்பை துவங்கிய இயக்குனர் ஷங்கர் இறுதி கட்ட படப்பிடிப்பை முடித்து ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து தக் லைஃப் ஷூட்டிங் ஆரம்பித்துள்ளது. இதுமட்டுமின்றி இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப்பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடிக்கும் ‘கல்கி ‘படத்தில் கமலும் இணைந்துள்ளார்.தற்பொழுது இத்திரைப்படத்திற்காக அவர் வாங்கிய சம்பளம் தான் இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. அதற்காக அவர் 20 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம்.
சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் பலரும் படத்துக்கு படம் கோடிக்கணக்கில் சம்பளத்தை ஏற்றி கோடி கோடியாக சொத்துக்களை சேர்த்து வைத்து வருகின்றன.…
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா செட்டி. கர்நாடகா மாநிலம் மங்களூரில்…
சிறு வயது முதலே நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட நடிகை ஷிவானி நாராயணன். விருதுநகரில் பிறந்த பெண். பின்னர் சென்னை…
இறுதி சுற்று திரைப்படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை ரித்திகா சிங். மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸ்…
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா,…
வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தின் மூலமாக அதிகம் கவனிக்கப்படும் கதாநாயகியாக மாறி இருக்கிறார் மீனாட்சி…