தமிழில் அஜித்தின் வீரம் திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் பாலா. மலையாள நடிகரான இவர் தமிழில் அன்பு , அப்பா அம்மா செல்லம் மற்றும் வீரமுள்ளிட்டம் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் பாடகி அம்ருதாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். அதன் பிறகு சில காலம் தனிமையில் வாழ்ந்து வந்த இவர் டாக்டர் எலிசபெத் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவருடனும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் அவரையும் விவாகரத்து செய்தார்.
இதனைத் தொடர்ந்து மூன்றாவதாக உறவுக்கார பெண்ணான கோகிலா என்பவரை சமீபத்தில் தான் பாலா மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் எர்ணாகுளம் கலூர் பாவகுளம் கோவிலில் நடைபெற்றது. இவர்களின் திருமணம் குறித்து பல விமர்சனங்கள் எழுந்தது. அதே சமயம் பாலாவின் மனைவி கோகிலாவை பற்றி பத்திரிகைகளில் தவறான செய்திகளும் வந்தன. இப்படியான நிலையில் தனது மனைவிக்கு ஆதரவாக குரல் கொடுத்து பாலா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், நானும் என் மனைவியும் மிகவும் மன வருத்தத்தில் இருக்கிறோம்.
அதற்கு முக்கிய காரணம் மீடியா தான். அடுத்தவங்க மனைவியைப் பற்றி நீங்கள் எப்படி தவறா எழுத முடியும். என்னுடைய மனைவி கோகிலா வேலைக்காரி என்றும் வேலைக்காரியின் மகள் என்றும் தேவை இல்லாம எழுதிட்டு இருக்கீங்க. இதுதான் மீடியாவின் தர்மமா? என் மனைவி வேலைக்காரி என்று சொல்லும் உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது. நானும் உங்க மனைவி பற்றி பேசட்டுமா. சினிமா நடிப்பு பற்றி என்ன வேணாலும் பேசுங்க. என் மனைவி பற்றி பேச உங்களுக்கு எங்கிருந்து தைரியம் வந்தது. அந்த உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தா? என் மனைவி கோகிலாவின் தந்தை பிரபலமான அரசியல் பிரமுகர்.
இந்த விவகாரம் தொடர்பாக நான் போலீசில் புகார் அளிக்க சென்ற போது அவர்தான் என்னை தடுத்து விட்டு நான் பார்த்துக் கொள்கிறேன் என கூறினார். நான் இந்த சமூகத்தில் பலருக்கு பல உதவிகளை செய்து கொண்டிருக்கிறேன். அதைப் பற்றி எல்லாம் பேசாமல் என் மனைவி பற்றி எதுக்கு பேசுறீங்க. தவறான செய்தி ஒரு பத்திரிக்கையில் வந்தது. உடனே அனைத்து பத்திரிகைகளும் என் மனைவி பற்றி எழுதுகிறார்கள். எங்கள் மகிழ்ச்சியை கெடுப்பதற்காகவே இது போன்ற செய்தியை சிலர் பரப்புகின்றனர். என் மனைவி பற்றி தவறான செய்தியை எழுதிய நபர் கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டும். அவங்க மன்னிப்பு கேட்கிற வரைக்கும் நான் சும்மாவே இருக்க மாட்டேன் என்று ஆதங்கத்துடன் பாலா வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…