Categories: சினிமா

படத்துக்காக அதை செய்யச் சொன்ன இயக்குனரிடம் கோவப்பட்ட அதர்வா.. அப்பாவோட இடத்தை பிடிக்க மாட்டாரு போலயே..

Spread the love

நடிகர்களின் மகன்கள் சினிமாவிற்கு வருவது புதிதான விஷயம் அல்ல. ஆனால் அப்படி வந்தவர்கள் அனைவரும் சினிமாவில் வெற்றி பெற்றது இல்லை. அப்படியான வாரிசு நடிகர்களில் வரிசையில் ஒருவர் நடிகர் அதர்வா. 90களில் கொடிகட்டி பறந்த நடிகர் முரளி. அவரது மகனான அதர்வா, 2010-ம் ஆண்டு பானா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். அதனை தொடர்ந்து முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி உட்பட பல படங்களிலும் நடித்தார்.

#image_title

தனது இரண்டாவது படத்திலேயே 100 நாட்கள் வெற்றி விழா கொண்டாடும் படமாக முப்பொழுதும் உன் கற்பனைகள் படம் மாறியது. அதன் பின்னர் அதர்வாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் ‘பரதேசி’. இயக்குநர் பாலா இயக்கத்தில் 2013ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் தமிழ் திரையுலகிற்கு மட்டுமல்ல, அதர்வாவிற்கு மிக முக்கியமான படமாக அமைந்தது. இன்றளவும் அதர்வா பெயரைக் கேட்டாலே அவரது ‘பரதேசி’ பட கெட்டப் தான் பலரது கண்முன்பும் தோன்றும். அந்த அளவுக்கு சிறப்பாக நடித்திருப்பார். பரதேசி படத்தில் காட்சிக்கு காட்சிக்கு நடிப்பது போல் இல்லாமல் நிஜமாகவே வாழ்த்திருப்பார் என்றும் சொல்லும் அளவுக்கு அதர்வா நடிப்பில் பட்டையைக் கிளப்பியிருப்பார்.

#image_title

அதை தொடர்ந்து ‘இரும்புக் குதிரை’ (2014), ‘சண்டி வீரன் (2015)’, ‘ஈட்டி’ (2015), ‘கணிதன்’ (2016), ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ (2017), ‘செம போத ஆகாதே’ (2018), ‘பூமராங்’ (2019) போன்ற திரைப்படங்களில் நடித்தார். இதில் ‘சண்டி வீரன்’ திரைப்படம் தவிர பிற திரைப்படங்கள் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக எவ்வித வெற்றியையும் எட்டவில்லை. ‘செம போதை ஆகாதே’ என்ற படம் மூலமாக அதர்வா தயாரிப்பாளராகவும் அறிமுகமானார். 2018 ஆம் ஆண்டு நடிகை நயன்தாரா உடன் இணைத்து ‘இமைக்கா நொடிகள்’ என்ற படத்தில் நடித்தார்.

#image_title

அடுத்தடுத்து தோல்விகளை தழுவி வந்த அதர்வா, ஓடிடி தளத்தில் மந்தகம் என்ற வெப் சீரிஸில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தது ஓரளவு வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், நடிகர் அதர்வா, இயக்குநர் ஒருவரிடம் கடுமையாக நடந்து கொண்டதாக சினிமா விமர்சகர் செய்யாறு பாலு ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். அதர்வா நடித்து எந்தப் படம் வெளியாகி இருக்கிறது? அவருக்காக யார் இயக்குநர்களிடம் படம் கேட்கிறார்? என கேள்வி எழுப்பியுள்ளார் செய்யாறு பாலு.

அத்தோடு, கொரோனாவுக்கு முன்பு நடிகர் அதர்வா ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்த நிலையில், ஊரடங்குக்கு பிறகு மீண்டும் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் போது, அதர்வா உடல் பருமன் அதிகரித்து விட்டதாகவும், சற்று உடல் எடையை குறைக்க வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதர்வா ஆத்திரமடைந்ததாகவும், அவரது மேலாளரை விட்டு, இயக்குநரிடம் மன்னிப்பு கேட்க கோரியதாகவும் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்..

Archana

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

1 மணத்தியாலம் ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

1 மணத்தியாலம் ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

2 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

2 மணத்தியாலங்கள் ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

2 மணத்தியாலங்கள் ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

2 மணத்தியாலங்கள் ago